Tuesday, November 30, 2010

How should we be ...

This is a powerful message in our modern society. We seemed to have
lost our bearing & our sense of direction.
One young academically excellent person went to apply for a managerial
position in a big company.
He passed the first interview, the director did the last interview,
made the last decision.
The director discovered from the CV that the youth's academic
achievements were excellent all the way, from the secondary school
until the postgraduate research, never had a year when he did not
score.
The director asked, "Did you obtain any scholarships in school?" the
youth answered "none".
The director asked, " Was it your father who paid for your school
fees?" The youth answered, "My father passed away when I was one year
old, it was my mother who paid for my school fees.
The director asked, " Where did your mother work?" The youth answered,
"My mother worked as clothes cleaner. The director requested the youth
to show his hands. The youth showed a pair of hands that were smooth
and perfect.
The director asked, " Have you ever helped your mother wash the
clothes before?" The youth answered, "Never, my mother always wanted
me to study and read more books. Furthermore, my mother can wash
clothes faster than me.
The director said, "I have a request. When you go back today, go and
clean your mother's hands, and then see me tomorrow morning.*
The youth felt that his chance of landing the job was high. When he
went back, he happily requested his mother to let him clean her hands.
His mother felt strange, happy but with mixed feelings, she showed her
hands to the kid.
The youth cleaned his mother's hands slowly. His tear fell as he did
that. It was the first time he noticed that his mother's hands were so
wrinkled, and there were so many bruises in her hands. Some bruises
were so painful that his mother shivered when they were cleaned with
water.
This was the first time the youth realized that it was this pair of
hands that washed the clothes everyday to enable him to pay the school
fee. The bruises in the mother's hands were the price that the mother
had to pay for his graduation, academic excellence and his future.
After finishing the cleaning of his mother hands, the youth quietly
washed all the remaining clothes for his mother.
That night, mother and son talked for a very long time.
Next morning, the youth went to the director's office.
The Director noticed the tears in the youth's eyes, asked: " Can you
tell me what have you done and learned yesterday in your house?"
The youth answered, " I cleaned my mother's hand, and also finished
cleaning all the remaining clothes'
The Director asked, " please tell me your feelings."
The youth said, Number 1, I know now what is appreciation. Without my
mother, there would not the successful me today. Number 2, by working
together and helping my mother, only I now realize how difficult and
tough it is to get something done. Number 3, I have come to appreciate
the importance and value of family relationship.
The director said, " This is what I am looking for to be my manager.
I want to recruit a person who can appreciate the help of others, a
person who knows the sufferings of others to get things done, and a
person who would not put money as his only goal in life. You are
hired.
Later on, this young person worked very hard, and received the respect
of his subordinates. Every employee worked diligently and as a team.
The company's performance improved tremendously.
A child, who has been protected and habitually given whatever he
wanted, would develop "entitlement mentality" and would always put
himself first. He would be ignorant of his parent's efforts. When he
starts work, he assumes that every person must listen to him, and when
he becomes a manager, he would never know the sufferings of his
employees and would always blame others. For this kind of people, who
may be good academically, may be successful for a while, but
eventually would not feel sense of achievement. He will grumble and be
full of hatred and fight for more. If we are this kind of protective
parents, are we really showing love or are we destroying the kid
instead?*
You can let your kid live in a big house, eat a good meal, learn
piano, watch a big screen TV. But when you are cutting grass, please
let them experience it. After a meal, let them wash their plates and
bowls together with their brothers and sisters. It is not because you
do not have money to hire a maid, but it is because you want to love
them in a right way. You want them to understand, no matter how rich
their parents are, one day their hair will grow gray, same as the
mother of that young person. The most important thing is your kid
learns how to appreciate the effort and experience the difficulty and
learns the ability to work with others to get things done.
You would have forwarded many mails to many and many of them would
have back mailed you too...but try and forward this story to as many
as possible...this may change somebody's fate...

Wednesday, August 11, 2010

தேவை ஒரு சமுதாய மாற்றம்

தேநீர் யாவர்க்கும் பரிச்சயமான வார்த்தை. சுமை தூக்கும் தொழிலாளி தொடங்கி, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வரைக்கும் தமது பணிநிமித்தமான களைப்பை நீக்கி புத்துணர்வு பெறுவது தெருவோர தேநீர் கடைகளில்தான். ஒரு முறை வந்துசென்ற அனுபவத்திலேயே, ஆளைப்பார்த்ததும் ஸ்ட்ராங், மீடியம், லைட், சர்க்கரை கம்மி, நுரைபோட்டு, கட்டன் டீ என  நம் குறிப்பறிந்து தேநீர் வழங்கும் அவர்களின் வேலைநயமே தனிக்கலைதான்.

அதிகாலை, நான்கு மணியிலிருந்து துவங்கும் அவர்களது உழைப்பு, நள்ளிரவில்தான் முடிவடைகிறது. எட்டுமணிநேரம் பன்னிரண்டு மணிநேரம் என்பதெல்லாம் கிடையாது, பட்டறையை மாற்றிவிட பணியாள் எவருமில்லாத பட்சத்தில் இருபது மணிநேரமும் அவர்களுக்கு வேலைநேரம்தான். மீண்டும் அடுத்த நாள் நான்கு மணிக்கு எழுந்தாக வேண்டும் என நச்சு சுழலாய் சுழலுகிறது இவர்களது வாழ்க்கை. நடுத்தரமான தேநீர் கடைகளில் கூட “பன்னிரண்டு மணிநேர” ஷிப்டு முறை உண்டு. ஆனால், தானே முதலாளியாகவும் தானே தொழிலாளியாகவும் தனியாளாய் நின்று நடத்தும் தெருவோர தேநீர் கடைகளின் நிலைமைகளோ வார்த்தைகளில் வடித்திர முடியாத ரணங்களை கொண்டிருக்கிறது.

ஐந்து ரூபாயை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளருக்கு புத்துணர்வை பரிமாறும் இத்தொழிலாளர்கள், தூக்கமிழந்து, சுக-துக்கமிழந்து, தன் உணர்விழந்து நடைபிணமாய் நடைபாதையில் படுத்துறங்கும் அவலத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இதோ, நாம் அன்றாடம் கடந்து செல்லும் வழிநெடுக நிரம்பியிருக்கும் தெருவோர தேநீர் கடையொன்றின் துயரக்காவியம்.
_____________________________________________________

வடபழனி கோவிலுக்கும் லிபர்டி திரையரங்கிற்கும் இடைப்பட்ட பேருந்து நிறுத்தமான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-க்கு அருகாமையில் இருக்கிறது, சென்னை மாநகராட்சியின் வணிகவளாகம். இரண்டு தளங்களை கொண்ட இவ்வளாகத்தில் நூற்று இருபது கடைகள்-அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆற்காடு சாலையையொட்டி நீண்டிருக்கும் இந்த மாநகராட்சி வணிக வளாகத்தின் நடைபாதையில் தேநீர் கடைநடத்தும் இருபத்தியெட்டு வயது இளைஞன் சொக்கலிங்கம்.

இதே கடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாளொன்றுக்கு அறுபது ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த சொக்கலிங்கம், தற்போது இந்த கடைக்கு முதலாளியாகியிருக்கிறார், கூடவே ஏறத்தாழ ஒன்றரை லட்சத்துக்கு கடனாளியாகியுமிருக்கிறார்.

சென்னையை நோக்கிவரும் ஒவ்வொரு சராசரி இளைஞனுக்கும் இருக்கும் அனைத்து துடிப்புகளும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும், இலட்சியக் கனவுகளும், கந்துவட்டி என்ற வலைக்குள் விழுவதற்கு முன்பு வரை சொக்கலிங்கத்திற்கும் இருந்தன. இன்றோ, கந்துவட்டியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி, தன் இளமையை இழந்து, எப்போதும் துருதுருவென்றிருந்த தன்னியல்பையிழந்து, தன்உறவுகளிலிருந்து தூர விலகி, நடைபிணமாய் வாழ்ந்து வருகிறார் சொக்கலிங்கம்.

தேயிலைத் தூளும் பாலும் இல்லாத தேநீர்க்கடையை எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ, அது போலத்தான் கந்துவட்டி என்ற வார்த்தை புழங்காத தேநீர் கடையையும் நாம் பார்க்க முடியாது, என்ற நிலை வந்து எவ்வளவோ நாளாகிவிட்டது. இத்தொழிலாளியினது உழைப்பை உறிஞ்சி, அவனது குருதியை குடித்துத்தானே பெருத்திருக்கிறது இந்த கந்துவட்டி வலைபின்னல்.
_____________________________

சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர் தேவகோட்டைக்கு அருகேயுள்ள பகையணி. அண்ணன் தம்பி மூன்று பேர், திருமணமான அக்கா ஒருவர், மற்றும் வயதான பெற்றோர்கள், இவர்கள்தான் இவரது குடும்பம். தண்ணியில்லா மாவட்டம் என்பதால் இங்கு பெரும்பாலும் விவசாயக் கூலிகள்தான். கால்நடை வளர்ப்பு உபதொழில். இவர்களுக்கு சொந்த நிலமென்று எதுவுமில்லை. எப்போதாவது குத்தகைக்கு விவசாயம் செய்வதுண்டு. அவ்வாறு குத்தகை விவசாயம் செய்தால் ஏதோ ஆறு மாதத்துக்கு வீட்டு அரிசி சோறு சாப்பிடலாம். இல்லையெனில் வருசம் முழுதும் ரேசன் அரிசிதான்.

ஊரில் இளைஞர்கள் எவரையும் பார்க்க முடியாது. இவர்களெல்லாம், சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், புரோக்கர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வெளிநாடுகளுக்கும் சென்று கொத்தடிமைகளாய் காலந்தள்ளுகின்றனர். மூன்றுவேளை சாப்பாடும், தங்குவதற்கு இடமும் கிடைப்பதனால், இவர்களது முதன்மையான தெரிவு திருப்பூர்தான். இதைத்தவிர வேறு வழியில்லை என்பதால், இந்த நரக வாழ்க்கைக்கு இவர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர்.

லிங்கம் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். படிப்பில் லிங்கம் மக்காம் (ஆசிரியர்களின் வார்த்தைகளில்). அதனால் ஒன்பதாவது பெயில் ஆக்கப்பட்டிருக்கிறார். தன் சக நண்பர்கள் பத்தாம் வகுப்புக்கு செல்கையில் தான் மட்டும் ஒன்பதாம் வகுப்புக்கே மீண்டும் போக இவருக்குப் பிடிக்கவில்லை. நண்பர்களின் கேலியும் இவரை காயப்படுத்தியிருக்கிறது. அத்தோடு இவரது பள்ளிபடிப்பும் முடிந்துவிடுகிறது.

படிப்பில் லிங்கம் “மக்கு” என்று ஆசிரியர்களால் முத்திரைக் குத்தப்பட்டாலும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசயமும் உண்டு. ஆம், லிங்கம் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கபடி, கோகோ, ஈட்டி எரிதல், குண்டு எரிதல் என பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்திய லிங்கம், ஈட்டி எரிதலில் சீனியர் பிரிவில் மாநில அளவில் மட்டுமல்ல, டெல்லிவரை சென்று விளையாடி தேசிய அளவில் இரண்டாம் இடத்தைகூட பிடித்திருக்கிறார். இந்த விசயத்தை அவர் சர்வசாதாரணமாக சொன்ன போது அதை எனக்கு வேதனையாக இருந்த்து.

பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்ட பிறகு இவர் தொடங்கிய முதல் தொழில், ஆடுமாடு மேய்ப்பதில் தொடங்குகிறது. பின் இவரது ஊர்க்காரர் ஒருவரது சிபாரிசின் பேரில் சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியிலுள்ள தோல்பதனிடும் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்கிறார். ஒரு சிப்டுக்கு வெறும் மூன்று தொழிலாளிகளை மட்டுமே கொண்டு இயங்கும் சிறுதொழில் நிறுவனம் அது. பதப்படுத்தப்பட்டு வரும் தோல்களை குறிப்பிட்ட நிறத்திற்கு மாற்றித்தருவது (மேட்சிங்) இவர்களது வேலை. அமிலக்கரைசல்களை வெற்றுக்கைகளால் கலக்குவது, பாய்லருக்குள் இறங்கி நிறம் மாற்றப்பட்ட தோல்களை வெளியே எடுத்துப் போடுவது, அந்த நச்சுக்கழிவுகளை இரும்பு வாளிகளால் அள்ளி வெளியேற்றுவது என்பதுதான் இவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள். நாசியை துளைத்தெடுக்கும் நாற்றத்தையும், அருவெறுப்பையும், சகித்துக்கொண்டு ஒன்பது மாதங்களை ஓட்டியிருக்கிறார். பணிச்சூழலும், பணிச்சுமையும் கொடுத்த நெருக்கடியில் அங்கிருந்து ஊருக்கே திரும்பிவிடுகிறார்.

இந்த ஒன்பது மாதங்களில் இவர் சம்பாதித்தது மாதமொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய். இந்த அற்பத்தொகையோ அறை எடுத்து தங்கியதற்கும், மெஸ்ஸில் சாப்பிட்டதற்குமே சரியாய் போனது. ஊருக்குப் போகக்கூட பணமில்லாமல் சொந்தகாரனிடம் கடன்வாங்கிக் கொண்டும், தங்கியிருந்த அறையிலிருந்த சக தொழிலாளியினுடைய பேண்ட்-சர்ட்டை போட்டுக்கொண்டும், காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் ஆளாய் ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.
ஏதோ, சென்னையில் பெரிய ஆளாய் உருவெடுத்து நிற்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை சொக்கலிங்கம் தவறவிட்டு, விட்டேத்தித்தனமாய் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் நினைத்தார்கள். திரும்பி வந்த சொக்கலிங்கத்திடம் முகம் கொடுத்து பேசக்கூட எவரும் தயாரில்லை. ஒருவருடத்தை வீணடித்து விட்டோமே என்ற கவலை சொக்கலிங்கத்திற்கு.

கிராமத்தில், இரண்டு மாதங்கள் பழையபடி மாடு மேய்ச்சல் பணியை தொடர்கிறார். அதன்பின்னர், மீண்டும் சென்னை வருகிறார். முதலில் ஓட்டலில் கிளீனிங் பாயாக வேலையை தொடங்குகிறார், பிறகு தமது உறவினர்களின் தொடர்பில், ஒரு டீக்கடையொன்றில் உதவியாளராக வேலையை தொடர்கிறார். மூன்று வேளை சாப்பாடு, தங்குமிடம் இலவசம், தினமும் அறுபது ரூபாய் சம்பளம். இந்த வேலை இவருக்குப் பிடித்து விடுகிறது.
___________________________________________

எச்சில் கிளாஸ் கழுவுவது, மாஸ்டர் போட்டுத் தரும் தேநீரை அலுவலகங்களுக்கும், கடைகளுக்கும் எடுத்து செல்வது, தண்ணீர் எடுப்பது, உள்ளிட்டவைதான் இவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள். எந்த மாஸ்டரும் இவரை பட்டறைப் பக்கமே அனுமதிப்பதில்லை. இதிலேயே இரண்டு வருடங்களை ஓட்டி விடுகிறார்.
இந்நிலையில்தான், தற்பொழுது இவர் நடத்திவரும் இந்த பிளாட்பார கடையின் முன்னாள் உரிமையாளர் அறிமுகமாகிறார். அவரும் இவர் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரராம். ஏற்கெனவே வேலை செய்து வந்த கடையிலிருந்து விலகி, இந்த கடையில் சேர்கிறார். இந்த கடை உரிமையாளர்தான் இவருக்கு முறையாக தேநீர் போடும் விதத்தை கற்றுத்தருகிறார். இவரும் ஆர்வத்தோடு கற்றுத் தேறுகிறார். இவரது சம்பளமும் அறுபதிலிருந்து நூற்று இருபதாக உயர்ந்து விடுகிறது.

முன்னைப்போல, எச்சில் கிளாஸ் மட்டுமே கழுவிவந்த சொக்கலிங்கமல்ல. இப்போது அவர் தேநீர் போடத்தெரிந்த மாஸ்டர் ஆகிறார். வியாபாரத்திலுள்ள நீக்கு போக்குகளையும் கற்றுக்கொள்கிறார். கடை உரிமையாளர் ஊருக்குச் சென்றாலும் தனியாளாய் கடையை நடத்துமளவுக்கு பக்குவமாகிறார். இத்தருணத்தில்தான், உண்மையில் தன்னை நினைத்து சந்தோசப்படுகிறார். நம்மாலும் விசயங்களை கற்றுக்கொள்ளமுடியும். நமக்கு தெரிந்த தொழில் ஒன்று இருக்கிறது, இனி கவலையில்லை என்ற தன்னம்பிக்கை பிறக்கிறது.
இதனூடாக இக்கடையின் உரிமையாளர்கள் மாறுகிறார்கள். ஆனாலும், இதே கடையில் இவர் தன் பணியைத் தொடர்கிறார். இதற்கு முன் இருந்த கடை உரிமையாளர்களெல்லாம், தாமும் பட்டறையில் நாள் முழுவதும் நின்று, எச்சில் கிளாஸ் கழுவி வந்திருக்கின்றனர். ஆனால், இறுதியாக வந்த உரிமையாளர், ஒரு பட்டதாரி இளைஞர். அவர் முதலுக்கு மட்டுமே சொந்தக்காரர். கடைக்கு வந்து போவது சில மணிநேரங்கள்தான். அவ்வாறு வந்தாலும் கல்லாவை மட்டுமே கவனிப்பார். மற்ற எல்லா வேலைகளையும் சொக்கலிங்கம் ஒருவர் மட்டுமே கவனித்தாக வேண்டும். பிளாக்கில் சிலிண்டர் வாங்குவது, தண்டல் காரனுக்கு பதில் சொல்வது, உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் மட்டுமே கவனித்து வந்திருக்கிறார். சொல்லப்போனால், இந்தக் கடைக்கென தான் தன் பணத்தை போடாதிருந்தாலும், இந்த கடையை நிர்வகித்தது சொக்கலிங்கம்தான். ஆனாலும் இவருக்கு சம்பளம் அதே நூற்று இருபதுதான்.

இந்நிலையில், இப்புதிய பட்டதாரி இளைஞரான அந்த உரிமையாளரும், தினமும் இருநூற்றைம்பது மட்டும் கொடுத்துவிட்டு, கடையை சொக்கலிங்கத்தையே பார்த்துக்கொள்ளச் சொல்கிறார். சொக்கலிங்கமும் , இப்புதிய உரிமையாளர் கடையில் இல்லாதுபோனால், நட்டமேதும் இல்லை. எல்லா வேலையும் தான் மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது, எனக்கருதி, இந்த ஒப்பந்தப்படி கடையை பொறுப்பேற்று நடத்த சம்மதிக்கிறார். ஒரு ஆறுமாதங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓடுகிறது.

ஒரு கட்டத்தில், பட்டதாரி இளைஞரான இப்புதிய உரிமையாளர், கடையின் மொத்தப் பொறுப்பையும் சொக்கலிங்கத்திடம் விட்டுவிட முடிவு செய்கிறார். அதாவது, இந்தக் கடைக்கு என தான் போட்ட முதல் அனைத்தையும் சொக்கலிங்கம் தனக்கு பணமாக திருப்பித் தந்து விடுவது, கடையை தொடர்ந்து சொக்கலிங்கமே நடத்திக்கொள்வது, என்பது அவ்வொப்பந்தம்.

“தினமும் எப்பாடு பட்டேனும் ஒரு நாள் தவறாமல் உங்களுக்கு இருநூற்றைம்பதை தந்து விடுகிறேன். நீங்க போட்ட முதல் அப்படியே இருக்கட்டும். நமக்கு இப்ப கிடைக்கிற வருமானமே போதும். என்கிட்ட முதல் போட காசு இல்ல. பின்னாடி கஷ்டமாயிடும்” என முதலில் மறுத்துவிடுகிறார் சொக்கலிங்கம்.

அப்பொழுதுதான், “சொக்கலிங்கம் மெட்ராசுக்கு வந்து இத்தனை வருசம் நாயா உழைச்சுட்டோம் இந்நேரம் நம்ம கையில காசு இருந்திருந்தா இந்த அருமையான வாய்ப்பை விட்டிருக்க மாட்டோம். அழகா, இந்த கடையை எடுத்து நடத்தியிருக்கலாம். இப்படி பொழைக்கத்தெரியாம இருந்திட்டோமே,” என உண்மையிலேயே வருந்துகிறார்.

பட்டதாரி இளைஞரோ, எப்படியேனும் இந்த கடையை சொக்கலிங்கத்திடம் கைமாற்றிவிட்டு, இக்கடைக்கென தான் போட்ட முதல் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவது என்பதில் உறுதியாயிருக்கிறார்.

சொக்கலிங்கத்திடம் பக்குவமாகப் பேசி, “கடையை நீயே கவனிச்சுக்க. இனிமே எனக்கு காசு எதுவும் தரவேண்டாம். கடைக்கு கொடுத்திருக்கிற அட்வான்சை கொடுத்திடு. அப்புறம் மெட்டீரியலுக்கு இருபதாயிரம் கொடுத்திடு. அவ்வளவுதான். அப்புறம் மாசாமாசம் வாடகை மட்டும் கட்டிட்டு கடையை நடத்திக்க. உங்கிட்ட காசு இல்லாட்டி என்ன லிங்கம், பைனான்சுக்கு நான் ஏற்பாடு பன்னுறேன். தினமும் கல்லா கட்டுற காச வச்சு தண்டல் கட்டினேனா நூறுநாள்ல முடிஞ்சுடும். அப்புறம் மொத்தகாசும் உனக்குத்தான்,” என தூண்டில் போடுகிறார்.

சொக்கலிங்கமும் இதற்கு சம்மதிக்கிறார்.  கடைக்கான அட்வான்சுக்கும், கடையில் உள்ள மெட்டீரியலுக்குமாக மொத்தம் எழுபதாயிரத்துக்கான தண்டல் சொக்கலிங்கத்தின் பெயருக்கு மாறுகிறது. சொக்கலிங்கம் இப்போது “முதலாளி”யாகிறார்.
சொக்கலிங்கம் தனது தேநீர்க் கடையில்
____________________________________________

சும்மா பத்துக்குப் பத்து கூட தேறாதா இடம். நாலுபலகையை ஒன்னாவச்சு சும்மா நாலு ஆணி அடிச்சிருக்கிற பட்டறை. அப்புறம் ஒரு ஓட்ட கேஸ்டவ்வு, ரெண்டு பால் பாத்திரம், ரெண்டு கப்பு, நாலு பிஸ்கட்டு பாட்டிலு, பன்னிரண்டு கண்ணாடி டம்ளரு இதுதான் மொத்த மெட்டீரியலு. இந்த பிளாட் பாரத்துக்கு அட்வான்சா? மாத வாடகையா?

இந்த கதையை சொக்கலிங்கம் என்னிடம் சொல்லும் போது எனக்கும் அதுதான் தோன்றியது சொன்னா நம்ப மாட்டீங்க, இன்னைக்கு சொக்கலிங்கம் இந்த கடைக்கு எவ்வளவு தெரியுமா மாத வாடகை செலுத்துகிறார்? ஆறாயிரம் ரூபாய். அட்வான்சு நாற்பதாயிரம் ரூபாய்.

இதை விடக்கொடுமை? இந்த கடை இருக்கிற மாநகராட்சி வணிக வளாகத்திலேயே, 800 சதுர அடி கொண்ட கடைக்கே மாத வாடகை ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறுக்குள்தான். ஆனா பிளாட்பாரத்துக்கு வாடகை ஆறாயிரம். உடஞ்ச பலகைக்கு இருபதாயிரம்.

வேறு ஒன்றுமில்லை, எல்லாம் ரிஸ்க்குத்தான் காசு. ஆமாம். இந்த கடை இருக்கிற இடத்தை ஆக்கிரமிச்சு, வளைச்சுப்போட்ட தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளூர் புள்ளியின் (கோடம்பாக்கம் பகுதி கவுன்சிலர் வெல்டிங்மணியின் மச்சான் என்ற பெயரில் வசூலிக்கும்) அல்லக்கைக்கு போய்ச்சேருகிறது இந்தப் பணம். அதுவும் அவ்வப்போது வந்து செலவுக்கு அம்பது கொடு நூறு கொடு என்று கேட்டால் மறுவார்த்தையின்றி தந்தாகவேண்டும். இல்லையெனில் கடையை காலி பண்ண வேண்டியிருக்கும். இது மட்டுமா, மாநகராட்சி அதிகாரிகளின் மிரட்டலுக்கும் ரெய்டுக்கும் உட்பட்டுதான் கடை நடத்தியாக வேண்டும்.
_____________________________________________________________

சென்னைக்கு வந்த பிறகு, தண்டல் என்ற வார்த்தைகள் அறிமுகமான பிறகு, சொக்கலிங்கம் முதன் முதலாய் வாங்கிய தண்டல் தொகை இதுதான். இந்த எழுபதாயிரத்துக்கு தினமும் எழுநூறு ரூபாய் தினத்தவணை கட்டியாக வேண்டும். கடைக்கான தினவாடகை இருநூறும் தினமும் செலுத்தியாக வேண்டும். ஆக நாளொன்றுக்கு குறைந்த பட்சம் தொள்ளாயிரம் ரூபாய் இலாபமாக கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், நிலைமையோ தலைகீழ். இந்த கடையின் ஒருநாள் டர்ன்ஓவரே ஆயிரத்திலிருந்து ஆயிரத்து முன்னூறுக்குள்தான். அதிலும் பெருந்தொகை பீடி, சிகரெட்டுக்கானது.

10-லிருந்து 12 லிட்டர் பாலை ஓட்டினால் தான் செலவுபோக ஐநூறிலிருந்த அறுநூறு ரூபாய்வரை இலாபமாக நிற்கும். தினமும் தொள்ளாயிரம் வேண்டுமானால், பயன்படுத்தும் பாலின் அளவு இருமடங்காக வேண்டும். ஆனால், ஏதோ காரணங்களால் நாளொன்றுக்கு எட்டு லிட்டருக்குமேல் போகாமல் வியாபாரம் தேங்கிவிடுகிறது. தினமும் ஐநூறை தேற்றுவதே பெரும்பாடாகி விடுகிறது.

இந்நிலையில்தான், அந்த விபரீதமான முடிவை எடுக்கிறார் லிங்கம். கந்துவட்டிக்காரனின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் மனஉளைச்சலுக்குள்ளான லிங்கம், அதிலிருந்து விடுபட இன்னோர் கந்துவட்டிக்காரனையே நாடிச்செல்கிறார். சுழற்சிக்காக இருபதாயிரம் ரூபாய் தண்டல் வாங்குகிறார். கமிசன் தொகை போக இவர் கைக்கு சேர்ந்தது பதினேழாயிரம் ரூபாய்.

இப்போது முன்னர் வாங்கியிருந்த எழுபதாயிரத்துக்கான தினத்தவணை எழுநூறு, கடைக்கான வாடகைக்கு இருநூறு, இறுதியாக சுழற்சிக்கென வாங்கிய இருபதாயிரத்துக்கான தினத்தவணை இருநூறு என தினமும் இவர் ஆயிரத்து நூறு ரூபாய் கட்டியாக வேண்டும். கடையிலிருந்து லாபமாக கிடைப்பது அதிகபட்சம் ஐநூறு தான். மீதம் செலுத்த வேண்டிய அறுநூறு ரூபாயை கையிலிருக்கும் பதினேழாயிரத்திலிருந்து எடுத்து கொடுக்கிறார்.
இந்த பதினேழாயிரமும் இருபத்தியெட்டு நாளில்  தீர்ந்து விடுகிறது. பின் மீண்டும் வேறொரு தண்டல்காரர் அதே இருபதாயிரம். அதே சுழற்சி. இவ்வாறு தண்டல் காரனை மாற்றியும், ஒரே தண்டல் காரனிடம் வேறொருவர் பெயரில் கணக்கு ஆரம்பித்தும் இருபது, அம்பது என தண்டல் வாங்கியே தண்டல் கட்டுகிறார்.

காலை எட்டு மணிக்கு இருபதாயிரம் தண்டல், மதியம் ஒரு மணிக்கு இன்னொரு இருபதாயிரம் தண்டல், இரவு எட்டு மணிக்கு அம்பதாயிரம் தண்டல், இடையிடையே பால், டீத்தூள், சர்க்கரையும், பீடி-சிகரெட்டும், பிஸ்கட்டும் வாங்கியாக வேண்டும். நாளை எண்ணி அல்ல, ஒவ்வொரு மணிநேரத்தையும் எண்ணி அதற்குள்ளாக ஒரு குறிப்பிட்ட தொகையை கல்லாவில் சேர்த்தாக வேணடும்.

இத்தருணங்கள் மிகக்கொடூரமானது. ஒரு நிமிடம் லிங்கத்திற்கு பதிலாக நம்மை அவ்விடத்தில் வைத்து நினைத்துப் பார்க்கவே, நெஞ்சம் பதைக்கிறது. ஆனால், இதனையெல்லாம் எதிர்கொண்ட லிங்கத்தின் மனவலிமை அசாத்தியமானது.

எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இடைவேளை நேரங்களில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு தேநீரை உறிஞ்சிக்கொண்டு லிங்கத்தின் கடைக்கு முன்பாக அரட்டையடிப்பது வழக்கம். “வரவர லிங்கத்தோட போக்கே சரியில்லை. எதுத்தாப்புல பஸ்டாண்டு வேற இருக்குதா, எந்நேரமும் வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கான். அவனே சிரிச்சிக்கிறான். டீ சொன்னா கைக்கு வர்றதுக்கு அரை மணிநேரமாவுது. முதல்ல பஸ்ஸ்டாண்டை மறைக்கிற மாதிரி போர்டு வைக்கனும்,” என லிங்கத்தை கலாய்ப்பார்கள்.

பேருக்கு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தன் வேலையை தொடர்வார் லிங்கம். தனக்குத்த்தானே பேசிக்கொள்வதற்கும், நாம் சொல்வது அவரது செவிகளைச் சென்று சேர்வதில் ஏற்படும் தாமதத்திற்கும் காரணம் பேருந்திற்காக காத்திருக்கும் இளம்பெண்களைப் பற்றிய நினைப்புகள் அல்ல. ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு தடவையாக வந்து சென்று கொண்டேயிருக்கும் டீத்துள், காபித்தூள், பிஸ்கட் கடைகாரன், பீடி சிகரெட் கடைக்காரன், கந்துவட்டிக்காரனுக்கு எடுத்துக் கொடுப்பதற்கு கல்லா இன்னும் நிரம்ப வில்லையே என்ற பயமும், என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்ற கவலையும்தான் காரணம் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். கைகள் அனிச்சை செயலாய் பாலையும் தேநீரையும் கலக்கிறது. அவரது மனமோ இந்தச் சிக்கலிலிருந்து என்றுதான் மீள்வோம் என்று குடைந்தெடுக்கிறது. முன்னதைப் போல இவையும் அனிச்சை செயலாகிவிட்டது இப்போது.

தண்டலுக்கு வாங்கி தண்டல் கட்டும் லிங்கத்தின் தற்போதைய சேமிப்பு கடையில் அட்வான்சாக இருக்கும் நாற்பதாயிரமும், போட்டிருக்கிற சட்டையும் கைலியும் தான். கடையில் பணியாளாய் அறுபது ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய பொழுதுகூட அவ்வப்பொழுது ஊருக்குத் தொகை அனுப்பியிருக்கிறார். முதலாளி ஆன பிறகோ ஒற்றைப் பைசா கூட அனுப்பியதில்லை. இதனை நினைத்து வருத்தப்படுவதோடு மட்டுமின்றி தன்னால் தன் குடும்பத்திற்கு பைசா பிரயோசனமில்லை என்ற குற்ற உணர்வில் சொந்தங்களிடமிருந்து தூர விலகியே வாழ்ந்து வருகிறார்.

ஊரில் திருவிழா, விசேசம் உறவினர்களின் திருமணம் போன்ற நாட்களில் லிங்கம் ஊருக்கு செல்வதில்லை. இவரது கைபேசியும் அன்று முழுவதும் அணைக்கப்பட்டிருக்கும். இவர் சொந்த ஊருக்குப் போய் ஆண்டுகள் ஐந்து கடந்து விட்டன. சமீபத்தில் இவரது சொந்த அண்ணனின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல்நாள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். பார்த்தவுடன் கணிக்க முடிந்தது. நீண்ட விசாரிப்புகளுக்குப் பின்னர்தான் அண்ணன் திருமணம் குறித்து சொன்னார். “மத்த விசேசத்துக்குத்தான் போகலை, அண்ணன் திருமணத்திற்காவது போகலாமில்லே… “என்றேன்.

“இல்லன்னா, ஊருக்கு போகவே புடிக்கலைன்னா. ஊருக்குப் போயி அஞ்சு வருசம் ஆவுது. இது வரைக்கும் வீட்டுக்குன்னு உருப்படியா ஒன்னுமே செஞ்சதில்லை. இப்ப எங்கிட்ட கையில காசும் எதுவுமில்லை. அண்ணன் கல்யாணத்துக்கு போகனும்னா கையில காசுல்லாம போன மரியாதையில்லைன்னா. நான் வெறும் ஆளுன்னா, போகவே புடிக்கலைன்னா.”

“ஒரு உண்மையை சொல்லட்டுமா, இன்னிய சூழ்நிலையிலை மாத்திக்க ஒரு சட்டை கைலியைத் தவிர என்னிடம் ஊருக்கு செல்ல துணிகூட இல்லை. ஒருத்தன்கிட்ட காசு கேட்டிருந்தேன், இன்னிக்கு சாய்ந்தரம் தரேன்னிருந்தான், கிடைச்சதும் ஒரு பேண்ட் சர்ட் ரெடிமேட்ல எடுத்துகிட்டு போலாம்னு இருந்தேன். கடைசியில அவனும் இல்லன்னுட்டான். அதான் ஒன்னுமே புரியல…” இதுதான் அவரது பதில். என் மனம் கேட்காமல் ஒரு ஆயிரத்தை எடுத்து கையில் திணித்து “முதல்ல ஊருக்கு கிளம்பிப் போங்க” என்றேன். அரைமனதோடு பெற்றுக் கொண்டார். இரவு பத்து மணிவாக்கில் என்ன கிளம்பியாச்சா என்று, சந்தேகத்தில் விசாரித்தேன். “இல்லைன்னா, என் சொந்தக்காரன்கிட்ட வீட்ல கொடுன்னு ஆயிரத்த கொடுத்துட்டு கோயம்பேடு பஸ்டாண்டோடு திரும்பிட்டேன்” என்றார். இதுதான் அவரது நிலைமை.

ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு மணிநேரமும் அவர் அனுபவிப்பது நரக வேதனையை. இன்னதுதான் என்று வார்த்தைகளில் அடக்கிடமுடியாதவை. இன்றைய நிலையில் அவர் வாங்கியிருக்கும் தண்டலுக்காக தினமும் ஆயிரத்து ஐநூறிலிருந்து ஆயிரத்து எழுநூறு வரை கட்ட வேண்டியிருக்கும். மாநகராட்சி வணிக வளாக காய்கறி அங்காடி தரைக்கடை வியாபாரிகள் சிலரது ஆலோசனைப்படி, தினமும் தண்டலுக்கான தவணைத்தொகையை கட்ட முடியாது, மூன்று நாளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கட்டுகிறேன். எத்தனை மாதம் ஆனாலும் முழுபணத்தையும் நான் நிச்சயம் கட்டிவிடுவேன். என்று அறிவித்து அதன்படி செய்துவருகிறார், லிங்கம்.

இவை, வெறும் வாய்வார்த்தைகளால் மட்டுமே சாத்தியமாகிவிடவில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியும், அவன் வசைப்பாடலை எதிர்கொள்ள முடியாது அஞ்சியும், அவன் வரும் நேரத்தில் வேறெங்கேனும் சென்று ஓடி ஒளிந்தும்….தான் சமாளித்துவருகிறார்.

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சமாளிப்பார் சொக்கலிங்கம்? இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நீடிக்கும் அவரது மனஉறுதி? கந்துவட்டிக்கும்பலின் அஸ்திரம் மாறுகிற போது லிங்கத்தின் முடிவில் மட்டும் மாற்றம் வராதா, என்ன?

விதர்பாவின் விவசாயிகளும், திருப்பூர் தொழிலாளர்கள் தாங்கள் இறுதியாய் பயன்படுத்திய தூக்குக்கயிறும், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உயிருடன் எரிந்த சடலங்களும், காலியான விசப்புட்டிகளும் உங்கள் நினைவுகளை இன்னும் கலைக்கவில்லையா?
___________________________________________________________
“தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற வேட்கையும் இருந்தால் வெற்றி நம்மைத் தேடிவரும்.” அப்துல் கலாம் தொடங்கி இறையன்பு வரைக்கும் இவர்கள் கிறுக்கித்தள்ளும் காகிதங்களிலெல்லாம் விரவிக்கிடக்கும் வார்த்தைகள் இவை.

இவற்றுள் எவையில்லை லிங்கத்திடம்?
தனியாளாய் காலை முதல் இரவுவரை ஓய்வின்றி மாடாய் உழைக்கும் லிங்கத்திடம் கடின உழைப்பு இல்லையா?

எத்தனைநாள்தான் எச்சில் கிளாஸ் கழுவியே பொழப்பை ஓட்டுறது என்றெண்ணி, கையில் பத்து பைசா இல்லாத போதும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, தண்டல் வாங்கி கடைப்பொறுப்பை ஏற்ற லிங்கத்திடம் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற வேட்கையில்லையா?

தான் போட்ட மனக்கணக்கு ஓரிரு மாதங்களிலேயே பொய்த்துப் போனபோதும், கைநீட்டி பணம் வாங்கிய தண்டல் காரனிடம் தினம் தரும் தவணையை நிறுத்தக்கூடாது என்று, மற்றோர் தண்டல் காரனிடமே மீண்டும் தண்டல் வாங்கி தண்டல் கட்டிய லிங்கத்திடம் நாணயமும் நேர்மையும் இல்லையா?

இனி யாரிடமும் தண்டல் வாங்க முடியாது என்ற சூழல் வந்தபோதும், தன்னைப்பற்றி கவலை கொள்ளாது, தனது உணவுத்தேவைகளை சுருக்கிக்கொண்டும், தான் இதுவரை தங்கி வந்த அறையை காலிசெய்துவிட்டு மாநகராட்சி வணிகவளாகத்தின் நடைபாதையையே தன் புதிய இருப்பிடமாக்கிக்கொண்டும், இதன் மூலம் மிச்சம் பண்ணிய தொகையை கொண்டு தண்டல் கட்டிய லிங்கத்திடம் சோதனைகளை கண்டு விலகி ஓடாது அதனை எதிர்கொண்ட துணிவில்லையா? இல்லை, அர்ப்பணிப்பும், தியாகமும், விடாமுயற்சியும் தான் இதில் அடங்கியிருக்கவில்லையா?

இன்னும் எவைதான் இல்லை லிங்கத்திடம்?
நாட்டில் இவரைப்போலவே உழலும் எத்தனையோ கோடி சொக்கலிங்கங்களுக்கு நாம் தரும் பதில் என்ன? அய்யோ பாவம் என்பதும், ஐநூறோ ஆயிரமோ என்னால் முடிந்ததை தருகிறேன் என்பதும் அனுதாபத்தின், மனிதாபிமானத்தின் வெளிப்பாடுதானே தவிர, ஒரு போதும் இவை மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வாகிவிடுமா என்ன?

இந்த சமூக அமைப்பின் மீது சந்தேகம் கொள்ளாமல், அதன் மீது சினம் கொள்ளாமல், அதன் மீது காறி உமிழாமல், இதற்கான மாற்றைத் தேடாமல், நாம் ஒவ்வொருவரும் விலகிச் சென்று விட முடியுமா என்ன?

-- நன்றி வினவு 

Tuesday, July 6, 2010

கல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..


சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங் என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர். மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.
பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.

கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல் படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.

இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.
உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ்  என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.
ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.

தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.

Friday, July 2, 2010

உயிர்


uyire -

Saturday, June 26, 2010

Saturday, June 12, 2010

விக்ரமாதித்தனும், வேதாளமும்

விக்ரமாதித்தனும், வேதாளமும்

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி உச்சியில் இருந்த வேதாளத்தை தனது வாளினால் கட்டுப்படுத்தி, தன்னுடைய தோளின் மேல் ஏற்றிக்கொண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி காட்டிலிருந்து நாட்டை நோக்கி விறு, விறுவென்று நடக்க தொடங்கினான். தன்னை தனது தோளின் மேல் சுமந்து கொண்டு மெளனமாக நடந்து செல்லும் அரசன் விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம் பேச தொடங்கியது:
"விக்கிரமாதித்த மன்னனே, ஒரு நாட்டின் அரசனாக இருந்தும்கூட, என்னை சிறைபிடிக்க உன் வீரர்களை அனுப்பாமல், நீயே மீண்டும், மீண்டும் மரத்தின் மீதேறி என்னை தூக்கிக்கொண்டு உன் தோளின் மேல் சுமந்து கொண்டு வேகமாக நடந்து செல்லும் உன்னை பார்க்கும்போது, எனக்கு முன் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த ஒரு சிற்றரசன் கதைதான் நினைவுக்கு வருகிறது. உன்னுடைய நெடும் நடை பயணத்தின் களைப்பு தெரியாமல் இருக்க அவனுடைய கதையை கூறுகிறேன், கேட்பாயாக.

பண்டைய பாரத நாட்டிலே, மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்திருந்த சமயத்திலே, அந்நாட்டின் தென்கிழக்கு மூலையிலே அமைந்திருந்த தமிழகம் என்ற மாநிலத்திலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் ஒரு நாட்டின் மன்னனைபோல், ஒரு சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு மன்னர் குல வழக்கப்படி மனைவிகளும், துனைவிகளும், அவர்கள் மூலம் நிறைய மக்களும் இருந்தனர். வயதாக வயதாக விவேகம் ஏற்படுவதற்கு பதிலாக, அவனுக்கு கேளிக்கைகளே வேண்டி இருந்தன. அந்த சிற்றரசன் குத்தாட்ட பிரியன். எப்போதும் கலை மற்றும் கும்மாங் குத்து ஆட்டங்களையும், தன்னை பற்றி பிறர் புகழ்ந்து எழுதும் கவிதைகளையும் மட்டுமே கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டுமே காலத்தை கழித்துக்கொண்டு இருந்தான். ஆட்சி புரிவதை பற்றி கவலைப்படவே இல்லை. அதனால் அவனுடைய உறவினர்களும் மற்றும் நண்பர்களுமே நாட்டை மறைமுகமாக ஆள்கிற நிலைமை தோன்றியது. அவ்வப்போது, மக்களுக்கு தான் ஆட்சி புரிவதுபோல் சீன் காட்டுவதற்காக, அவர்களுக்கு முன் தோன்றி, ஏதாவது பேசி, அவர்களை நம்ப வைத்தே காலத்தை கழித்து வந்தான்.

இந்த சிற்றரசன் ஆட்சி புரிவதற்கு வடநாட்டு ராணியின் உதவி தேவையாக இருந்தது. அதேபோல், வடநாட்டு ராணிக்கும் அங்கே ஆட்சி புரிய சிற்றரசனின் ஆதரவு தேவை பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்துகொண்டு தத்தமது ஆட்சிகளில் நன்றாக ஊழல் புரிந்து பணத்தில் கொழுத்து திளைத்தனர்.

இதற்கு நடுவே தெற்கில் உள்ள தீவு நாட்டின் அரசனுக்கு திடீரென்று ரோஷம் பொத்துக்கொண்டு வந்து அவன் அந்நாட்டின் தீவிரவாதிகளுடன் போர் புரிய ஆரம்பித்தான். இந்த போரில் சில அப்பாவி பொது மக்களும் சிக்கி அல்லல் பட்டனர். இதனை ஒரு பெரிய பிரச்னை ஆக்கி சிற்றரசனுக்கு எதிராக ஆதாயம் தேடுவதற்கு பல எதிர் கட்சிகளும், தீவிரவாத ஆதரவாளர்களும் புறப்பட்டனர். சிற்றரசனும் சாதாரணமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவன்தான். ஆனால் இப்போது அவன் நிலைமையே வேறு. அவனுக்கு ஆட்சி புரிய ஆதரவு தரும் வடநாட்டு ராணிக்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது பிடிக்காது. எனவே, சிற்றரசன் அவர்களுக்கு ஆதரவு தந்தால் அவன் ஆட்சியே "அம்போ" ஆகிவிடும் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது. ஆட்சி போய்விட்டால் குடும்ப வருமானமும் "கோவிந்தா' ஆகிவிடும் என்பதையும் அவன் மிகவும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததினால் அவன் இந்த விஷயத்தில் ரொம்பவும் அடக்கியே வாசிக்க வேண்டி இருந்தது. அதே சமயம், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை ரொம்பவே பயன்படுத்தி சிற்றரசனை "படுத்த" ஆரம்பித்தனர். இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சிற்றரசனுக்கு, அவனுடைய மிக நீண்ட கால அரசியல் அனுபவமும், மக்களின் சுலபமாக ஏமாறும் தன்மையும் இந்த சமயத்தில் கை கொடுத்தன.
சிற்றரசன் வடநாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான், தென் தீவு அப்பாவி மக்களை காப்பாற்ற சொல்லி. அவனுக்கும் தெரியும், வடநாட்டு ராணிக்கும் தெரியும் அந்த கடிதத்தை எந்த குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று. ஆனால், மக்கள் இந்த தள்ளாத (!) வயதிலும் தென் தீவு மக்களுக்காக அவன் கடிதம் எழுதி போராடுவதை (?) ரசித்தனர். எதிர்க்கட்சிகளுக்கோ ஒரே வயிற்றெரிச்சல்.

அடுத்ததாக கொட்டும் மழையில் தென் தீவு மக்களுக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினான். மக்களும் அதனை மிகவும் ரசித்து பார்த்தனர். ஒருவருக்கும் இதனால் ஒரு பைசாவுக்கும் உபயோகம் இல்லை என்று தெரிந்திருந்தும்.

தள்ளாத வயதில் குத்தாட்டங்களை பார்ப்பதற்கும், உபயோகமில்லாத கடிதங்கள் எழுதுவதற்கும் நேரம் செலவிட்டதால், சிற்றரசன் முதுகு வலியால் அவதிப்பட ஆரம்பித்தான். மருத்துவமனையிலும் அவனை அனுமதிக்க வேண்டியதாயிற்று. அரசியலில் அனுபவசாலியான சிற்றரசன் அந்த சந்தர்ப்பத்தையும் மக்களை ஏமாற்றவே உபயோக படுத்திக்கொண்டான். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே திடீரென்று ஒருநாள் அதிகாலையில் தென் தீவு மக்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறேன் என்று ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டான். அது மிக பெரிய செய்தியாக பரவி அனைவரும் அவனின் தியாகத்தை (?) மெச்சி அவனின் வயதையும் உடல் நலத்தையும் கருதி உன்னா நோன்பை கை விடுமாறு கெஞ்சி கூத்தாடி அதனை கைவிட வைத்தனர். அவனுக்கு மட்டும்தானே தெரியும் மருத்துவர்கள் அவன் உடல் நிலை கருதி, அன்று ஒரு நாள் அவனை சாப்பிடாமல் இருக்க சொன்னது (!).

இப்படியாகத்தானே, நோகாமல் நோன்பு கும்பிடும் செப்படி வித்தையை சிற்றரசன் பயன்படுத்தி வடநாட்டு ராணியையும் பகைத்துக்கொள்ளாமல், மக்களிடமும் கெட்டபெயர் எடுக்காமல், எதிர்கட்சிகளையும் வெறுப்பேற்றி, தன் ஆட்சியையும் பாதுகாத்துக்கொண்டான். இந்த கூத்துகளுக்கு நடுவில் தென் தீவு மக்களை பற்றி கவலை படுவதற்கு யாருக்கு நேரம் இருந்தது?

இந்த கூத்துகள் நடந்துகொண்டிருக்கும்போதே பாரத நாட்டில் தேர்தல்களும் நடந்து முடிந்தன. அதில், நம் சிற்றரசனும் வடநாட்டு ராணியும் நல்ல வெற்றி பெற்றனர். என்ன ஒன்று, வட நாட்டு ராணி எதிபார்த்ததைவிட அதிகமாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததால் அவளுக்கு சிற்றரசனின் தயவு முன்பைபோல இப்போது தேவைப்படவில்லை. ஆனால், சிற்றரசனுக்கு தன்னுடைய குறுநிலத்தை ஆள்வதற்கு வடநாட்டு ராணியின் உதவி முன்பை போலவே வேண்டி இருந்தது.

வடநாட்டு புதிய ஆட்சியில் பங்குகொள்ளுமாறு வந்த ராணியின் அழைப்பை ஏற்று சிற்றரசன் தன்னுடைய தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வடநாட்டுக்கு பயணமானான். தென் தீவு மக்களின் அல்லலை தீர்க்க வடநாட்டுக்கு பயணிக்காதவன் இப்போது வடநாட்டு ஆட்சியில் தன்னுடைய குடும்பத்தினருக்கு "தகுந்த" பதவியை ஏற்பாடு செய்வதற்கு தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாது பயணிப்பதை அனைவரும் "ஆ"வென்று வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது.

ஆனால், மிகவும் கித்தாப்புடன் தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று வடநாட்டுக்கு போனவனுக்கு "ஆப்பு" வைத்தாள் ராணி. சிற்றரசனுக்கு தற்போதைய நிலவரத்தை, அதாவது, அவனுக்குத்தான் ராணியின் உதவி தேவை, ஆனால், ராணி அவன் உதவி இன்றியே ஆள முடியும் என்னும் சூட்சுமத்தை புரிய வைத்தாள். அதனால், சிற்றரசன் தன்னுடைய மனைவியின் மூத்த மகனுக்கு மட்டுமே வடநாட்டு அமைச்சர் பதவியை பெற முடிந்தது. துணைவியின் மகளுக்கு ஒன்றுமே வாங்கி கொடுக்க முடியவில்லை. ஆனால், "கிடைத்தவரை லாபம்" என்ற கணக்கில் வருமானத்துக்கு குறைவில்லாமல் தன்னுடைய மற்ற ஆட்களுக்கு வட நாட்டில் மந்திரி பதவி வாங்கி விட்டான்.

பாதி வெற்றியுடன் ஊர் திரும்பிய சிற்றரசனுக்கு, மனைவியின் வரவேற்பு சரியாக இல்லை. என்ன காரணம் என்று பார்த்தால், சின்ன மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்று அவளுக்கு குறை. பாவம், தாயுள்ளம்தானே, தவித்தது. பார்த்தான் சிற்றரசன். எப்படியும் சின்னவன்தான் தனக்கு பிறகு ஒரு நாள் குறுநில ஆட்சிபீடம் ஏறவேண்டும். அந்த நாள் ஏன் இன்றாகவே இருக்க கூடாது என்று எண்ணியவன், அன்றே இளைய மகனை தமிழகத்தின் "இளவரசன்" என்று அறிவித்துவிட்டான். கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? மனைவியின் மகிழ்ச்சி அல்லவா முக்கியம். தான் ஒரு சிறந்த கணவன் என்று நிரூபித்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தான் சிற்றரசன்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அதே போல் நம் சிற்றரசனுக்கும் பாவம் இரண்டு பேரை சமாளிக்க வேண்டிய துர்பாக்கியம். மனைவியை ஒருவழியாய் சமாளித்தவனுக்கு துணைவியை சமாளிப்பது ரொம்பவே பேஜாறாகிவிட்டது. துணைவிக்கு சிற்றரசன் மேல் மிகுந்த கோபம். இருக்காதா பின்னே! மூத்தவளின் இரண்டு மகன்களுக்கு அடித்தது யோகம். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு செல்ல மகளுக்கு ஒன்றுமே இல்லை என்றால், எந்த தாய் மனதுதான் வாளாவிருக்கும்? துணைவியின் கோபம் தலைக்கு ஏறி, சிற்றரசனுக்கு, ஏண்டாப்பா இரண்டோடு நிறுத்தி விட்டோம். நாம் வழக்கமாக உபயோகிக்கும் சொல்லோடைபோல், எல்லாமே மூன்று மூன்றாக அடுக்குவோமே, "தமிழ்" என்னும் எழுத்து மூன்று, மா, பலா, வாழை என்னும் "கனிகள்" மூன்று, அய்யன் வள்ளுவன் இயற்றிய குரளில் "பால்கள்" மூன்று, என்பதுபோல், தானும் இரண்டோடு நிருத்தியிருக்காமல் மூன்றாவதாக ஒருவளையும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டது, எவ்வளவு தப்பாக போய்விட்டது, என்று நினைத்தான். இப்போது நினைத்து என்ன பயன் என்று தன் விதியை (மனதிற்குள்) நொந்துகொண்டு, தான் தினமும் வீட்டு வாசலில் திருட்டுத்தனமாக வணங்கும் "இயற்கையை" வேண்டிக்கொண்டு, துணைவியின் வீட்டுக்குள் அவளை எவ்வாறு சமாதான படுத்துவது என்று சிந்தித்தவாறே நுழைந்தான்."

இவ்வாறு சிற்றரசன் கதையை கூறி நிறுத்திய வேதாளம் விக்ரமனை பார்த்து கேட்டது: "இவ்வளவு நேரம் இக்கதையை கேட்ட மன்னனே, இதோ என்னுடைய கேள்விக்கு விடை கூறு. துணைவியின் பாராமுகத்தால் துன்புறும் சிற்றரசன், அவளை எவ்வாறு சமாதானம் செய்வான்? தென் தீவு மக்களின் துன்பத்தை தீர்க்க தான் செய்ததுபோல் வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி துணைவியின் மகளுக்கு பதவி வாங்கி கொடுப்பானா? இல்லை, இந்த தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது, மறுபடியும் வானில் பறந்து வடநாடு சென்று ராணியிடம் மகளுக்காக பதவி வேண்டி கெஞ்சுவானா? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூற தவறினால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்".

இவ்வளவு நேரம் பொறுமையாக வேதாளம் கூறிய கதையை கேட்ட மன்னன் விக்ரமன் வேதாளத்தின் கேள்விக்கு விடை கூறலானான்:

"வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி பலன் எதிர்பார்ப்பது என்பது, அதுவும் மந்திரி பதவி, அதிலும் தான் விரும்பிய இலாகா என்பது, குதிரைகொம்பு என்பது அப்பாவியான பொது மக்களுக்கே தெரியும் என்பதால், துணைவியிடம் அந்த பாட்சா பலிக்காது என்று சிற்றரசனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

மறுபடியும் வடநாட்டுக்கு வானில் பரந்து போவது இந்த தள்ளாத வயதில் தனக்கு கடினம் என்றாலும், துனைவிக்காக தன்னால் அந்த சுமையை தாங்கிக்கொள்ள முடியும் என்று "எதையும் தாங்கும் இதயம்" படைத்த அந்த சிற்றரசனுக்கு நன்றாகவே புரிபட்டது. ஆனால், அப்படி போவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் இன்னும் நன்றாகவே அவனுக்கு புலப்பட்டது. ஏனெனில், வடநாட்டு ராட்ஷசிக்கு, அதாவது, ராணிக்கு, தன்னுடைய ஆதரவு இப்போது தேவை இல்லை என்பதால், தான் குட்டி கரணம் போட்டாலும் அவள் மசியப்போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது.

எனவே, சிற்றரசன் மேலே கூறிய இரண்டு சமாதானங்களையும் துணைவியிடம் கூறுவதால் ஒரு பயனும் இல்லை என்று நம்பினான். துணைவிக்கும் இவை தெரிந்தேதான் இருந்தன. எனவே, துணைவியிடம் சிற்றரசன் என்ன கூறுவான் என்றால்:

"அன்பே, இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்ததிலிருந்து நீ என்னை புரிந்து கொண்டு இருப்பது இவ்வளவுதானா? நான் செய்வது அனைத்திலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்பது உனக்கு தெரியாததா? மூத்தவள் மகன்கள் ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டு மக்களிடம் மிகவும் கேட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டு விட்டனர். இனிமேல், அவர்கள் நல்ல பெயர் எடுப்பது என்பது "அத்தைக்கு மீசை முளைத்த கதை" தான்.

ஆனால், நம் செல்ல மகளின் கதை அப்படியா? ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத அவளை மக்கள் இப்போது "கவிதாயினி" என்று கூறும்படி செய்ய வைத்தது யார்? நான்தானே? என்னுடைய பல்கி பெருக்கெடுத்துள்ள வாரிசுகளிலேயே "சுமாராக நல்ல பெயருள்ளவள்" நம் செல்ல மகள்தான் என்று உனக்கும் தெரியும்தானே? அப்படிப்பட்டவளை ஒரு மந்திரியாக்கி வெகு விரைவிலேயே "ஊழல் பேர்வழி" என்று கெட்ட பெயர் எடுக்க விட்டால் நஷ்டம் நமக்குத்தானே? நம்மை போன்றவர்களுக்கும் அவ்வப்போது "நல்லவர்கள்" என்ற முகமூடி தேவைப்படும் அல்லவா? அச்சமயத்தில் நம் செல்ல மகள்தானே நமக்கு துணை? எனவேதான், அனைத்தையும் யோசித்து நம் மகளுக்கு பதிலாக மூத்தவளின் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தேன். ஏற்கெனவே கெட்டு போனவன்; இனிமேல் அவன் கெடுவதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், அன்பே, உன் கவலையும் எனக்கு புரிகிறது. மூத்தவளின் வருமானத்திற்கு வழி செய்து வைத்த நான், உனக்கு என்ன செய்தேன் என்றுதானே நீ கவலைப்படுகிறாய்? விடு கவலையை. உன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களைத்தானே நான் முக்கியமான துறைகளில் மந்திரிகளாக ஆக்க வைத்திருக்கிறேன்? எவ்வாறு இதனை நீ கவனிக்க தவறி விட்டாய்? உன்னுடைய ஆட்கள் உனக்கு சேரவேண்டிய வருமானத்தை, சேரவேண்டிய இடத்திற்கு, சேரவேண்டிய நேரத்தில், கட்டாயமாக சேர்த்து விடுவார்கள். ஒன்று பார்த்தாயா? என்னுடைய ஆட்கள் நிறைய பேருக்கு வடநாட்டான்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, உன்னுடைய ஆள் பேரில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் உன்னுடைய ஆள் என்ற ஒரே காரணத்திற்காக நான் வடநாட்டான் காலில், கையில் விழுந்து, உன் ஆளை அதே பதவியில் மறுபடியும் அமர்த்த வைத்து இருக்கிறேனே, இது போதாதா கண்ணே, நான் உன்னுடைய நலத்தை ஒருபோதும் கவனிக்க தவறுவதில்லை என்பதற்கு?

ஒரு புறம் உன்னுடைய நம்பிக்கையான ஆட்கள் மூலமே உன் வருமானத்திற்கு வழி. மறுபுறம் உன் அன்பு மகளின் நற் பெயர் நீடிக்கும்படி ஏற்பாடு. இதைத்தான் கண்ணே ஆங்கிலத்தில் "வின்-வின்" என்று சொல்லுவார்கள். இத்தகைய ஏற்பாட்டை உன்நலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செய்துள்ள என்னைப்போய் எவ்வாறு நீ சந்தேகித்தாய்?"

இவ்வாறு சிற்றரசன் தன்னிலை விளக்கம் அளித்தபிறகும், துணைவி முறுக்கிக்கொண்டு நிற்க என்ன முட்டாளா அவள்?" என்று விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்கு நீண்ட விடை அளித்தான்.

விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் "வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான், என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா" என்று கூறி விட்டு மௌனத்தை கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடிஇருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது. மன்னன் விக்ரமாதித்தனும் தன்னுடைய மௌனம் கலைந்ததால் விடுதலை பெற்று பறந்து சென்ற வேதாளத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அது குடி கொண்டு இருக்கும் முருங்கை மரம் நோக்கி திரும்பி நடக்கலானான்.

அப்படியே அவரோட இந்தக் கவிதையயும் பாத்துக்குங்கப்பு!!

திராவிடம் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை
கழக குஞ்சுகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.

("அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!!" என்ற பாடலின் மெட்டில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது).


(பல்லவி)

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )


(சரணம்)

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன் .....

ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ .....

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன்,

மனைவி, துணைவிகளின் மனம் கோணாமல்

பிரித்து, பகிர்ந்து கொள்வான் கழக தலைவன் .....

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!


(சரணம்)

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

தாயுள்ளத் தலைவர், கோடிகளை கவர்ந்து,

இதயத்தில் 'மட்டும்' இடம் தருகின்றார் .....


கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )

Sunday, May 23, 2010

நான் தேடும் செவ்வந்தி பூவிது

பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

Monday, May 17, 2010

எது காதல்?

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே மலருவதாகச் சொல்லப்படும் காதல் என்பதைப் பற்றி, இது நாள் வரை எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது; சொல்லப்பட்டு விட்டது. மனித இனம், காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளாய் வாழ்ந்து கொண்டிருந்த புராதன பொதுவுடமைக் காலத்தில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது நிலைமையே வேறு. அது அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும், மனுஷிகளுக்குமான கட்டாயப் பாடமாகிவிட்டது. காதல் புரிகிறவர்கள், காதலைப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியம் அற்றுப் போய், தான் புரிவதுதான் காதல், தான் புரிந்துகொண்டதுதான் காதல் என்று பறைசாற்றும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்என்கிற எப்போதோ யாருக்கோ எழுதப்பட்ட வசனம்தான் தற்போதைய தமிழ் காதல் உலகின் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாம் கொண்டிருக்கும் காதல் மட்டுமே புனிதமானது. அடுத்தவரின் காதலை விடவும் உயர்ந்தது எனும் எண்ணம் அனைத்துக் காதலர்களின் மனத்திலும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை எதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் மனோபாவம் பற்றியும் கவலைப்படாமல், வெறும் கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால் இன்றைய காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை என்பதே நூறு சதவிகிதம் காதல் மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில் தோல்வியடைகிறார்கள்.

காதல் என்பது நெருங்கி வரும்போது முகமூடிகளைப் பரஸ்பரம் கிழித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகும். அதனால்தான் தனித்தனி வீடுகளில் இனிய காதலர்களாக வாழ்ந்தவர்கள், ஒரே வீட்டில் தம்பதிகளாகச் சேரும்போது தாறுமாறாகித் தகராறு செய்து கொண்டு பிரிவதை நாம் நிறையவே காணமுடிகிறது. உலகப் புகழ் பெற்ற எத்தனையோ காதல் ஜோடிகள் பிரிவதற்காகவேதிருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். காவியக் காதலர்களான அம்பிகாபதியும் அமராவதியும் திருமணம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பிரிந்திருப்பார்கள் என்று விவாக ரத்துபெற்றவர்கள் வாதிடுவதுண்டு.

காதலில் தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்று சொல்லப்படுவது போலவே எல்லாக் காதல்களும் பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு பல்வேறு முகமூடிகளுடன் பவனி வருகின்றன. அதில் வெற்றி கிட்டிய பிறகு அதன் போக்கில் ஒரு மந்தமும், சலிப்பும் மேலிட்டு விடுகிறது. நினைக்கும்போது இனித்த காதல், கிடைக்கும்போது கசந்து விடுகிறது.

காதல் தோல்வி, காதல் மோசடி, காதல் கொலை என்பன போன்ற நிலைகளில் காதல் உலகில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளுக்கும் காரணம் அது இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதுதான். தூரத்தில் இருந்து கண்ணோடு கண் நோக்கும்போதே மலர்ந்துவிடுகிற காதல் நெருங்கிப் பழகும்போது பரஸ்பரம் முகமூடியைக் கிழித்துக் கொண்டு கோரமாக வெளிப்பட்டுச் செயலாற்றுகிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களாலும், பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களாலும் நாடகங்களாலும், கவிதைகளாலும் காதலைப் பற்றிய கணிப்புகள் இங்கே தாறுமாறாகப் பரப்பி விடப்பட்டிருக்கிறது. அதிலும் இன்றைய பெரும்பாலான திரைப்படங்கள் காதலையே முதுகெலும்பாகக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படத் தத்துவங்கள் போலியானவை; பொய்யானவை. தமிழ்த் திரைப்படங்களில் ஆண்-பெண் இருவரிடையே காதல் மலருவதற்கான காரணங்கள் மிகவும் அற்பமாகவும் அவலமாகவும் காட்டப்படுகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தான் காதலிக்கும் பெண்ணைப் பாட்டுப் பாடி கேலி செய்வது முதற் கொண்டு அவளின் தொப்புளில் ஆம்லெட்போடுவது வரை ஏராளமான அசிங்கங்கள் காதலின் வெளிப்பாடாகக் காட்டப் படுகின்றன. ஒருத்தனை மனசுல நெனச்சிகிட்டு நான் இன்னொருத்தன் கூட எப்படி வாழ முடியும்?” என்பதுதான் திரைப்படக் காதலிகளின் கவலை தோய்ந்த காதல் வசனமாக இருக்கிறது. அந்தக் கவலையில் துளியளவும் உண்மையில்லை என்பதுதான் நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சிகளாக இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் வாயிலாக, இதுதான் காதல் என்று எதையெதையோ கூவி விற்கிறார்கள்.

சாதி, மதம், இனம், மொழி, பணம் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது காதல் என்று தத்துவம் சொல்லி காதலர்களைச் சேர்த்து வைக்கிற வேலையைக் காலங் காலமாகச் செய்து வருகிற இவர்கள், இவையெல்லாம் உங்கள் வாழ்வில் குறுக்கிடும்போதும் உங்களிடமிருந்தே முளைக்கும் போதும் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்பதில்லை. இப்படியெல்லாம் சமாளியுங்கள் என்று பதில் சொல்வதுமில்லை. ஏனெனில் இத்தகைய விவாதங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்கிற முடிவு இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விரசத்தில் விம்முகிற கதாநாயகியின் மார்புகள்தான் இங்கே காண்பதற்கினிய காதல் காட்சிகளாக அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.

காதல் என்பது நெருப்பு’, ‘காதல் என்பது இருட்டுஎன்பன போன்று காதலைப் பற்றி எத்தனையோ பேர் ஏதேதோ புலம்பினார்கள். ஆனால், மார்க்ஸ் மட்டும்தான் காதல் என்பது மனித நேயம்என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அதன்படி ஜென்னியுடன் அவர் வாழ்ந்தும் காட்டினார். ஆழ்ந்த மனித நேயத்தின் வெளிப்பாடாக இருவரிடையே காதல் மலரும்போது வாழ்க்கை அவர்களைப் புரட்டிப் போடுவதில்லை. பிரித்துவிடுவதுமில்லை.

Sunday, May 16, 2010

Tamil Anthem 2010

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!



Friday, May 14, 2010

மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.

வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.

மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.

இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

Wednesday, May 12, 2010

ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை!


தான் சார்ந்த சமுதாயம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடைமைகள் போன்றவற்றை எப்போதும் மறக்காமல் இருப்பவர்தான் சிகரங்களைத் தொடுகிறார். சமூகம் தன்னைக் காயப்படுத்தினாலும், பதிலுக்கு கனியைத் தருகிற மனம் உள்ளவர்களே மிகச் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகிறார்…

அப்படி ஒரு மனிதர்தான் ரஜினிகாந்த். முன்பு தினந்தந்தியில் வெளியான அவரது கட்டுரையொன்றை மீண்டும் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையை இங்கே திரும்பத் தருவது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தலைவரின் சிந்தனையைப் புரிந்து கொள்ள இது உதவும்.

அந்தக் கட்டுரை:
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.

இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள்… என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.

வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.

நீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு “ஏ.சி” ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.

இறைவனையும் இயற்கையையும் புரிந்து கொள்ளாத மனிதன்!

நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப் போய்விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.

அதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.

சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.

பணம் இருந்தா போதுமா…

நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.

பிரச்சினைகள் வரும்போது அது பணப் பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக் கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.

அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.

தவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் – மனதில்தான் இருக்கிறார்.

மனதில் ஒன்று… வெளியில் ஒன்று எனப் பேசும் இயல்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

நான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை “வந்தவரை வாழ வைத்த தமிழகம்” என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

ஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி…”

Monday, May 10, 2010

உன்னாலே உன்னாலே படம் அறிஉரை

உன்னாலே உன்னாலே படம் (விமர்சனம் பின்னர் எப்பொழுதாவது!) பார்த்தபின் நானும் க.ந.(சு- இல்லை!)வும் பேசிக் கொண்டதை இயன்றவரை இங்கே எழுத்து வடிவமாக்கியிருக்கின்றேன். எனக்கு மட்டும் தெரிந்த (பிரபலமல்லாதவன்) நண்பன் க.ந. என்பதால் அவன் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்திருக்கின்றேன்.

நான்: (படத்தில்) நல்ல முடிவு. புரியாமல் சேர்வதைவிட புரிந்து பிரிந்துவிடலாம்.
க.ந: காதல் என்பதே பிரிந்திருப்பதுதான்.
நான்: பிரிந்தால்தான் காதலா?
க.ந: சேர்ந்தால் காதல் இல்லை.
நான்: காதலிப்பது ஒருவராகவும், கல்யாணம் செய்துகொள்வது வேறொருவராகவும் இருக்க வேண்டுமா?
க.ந: நான் அப்படிச் சொல்லவில்லை. காதல் கல்யாணத்தின் பின் செத்துவிடுகிறது.
நான்: கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?
க.ந: காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல் மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.
நான்: காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?
க.ந: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.
நான்: பொதுமைப்படுத்திக் கதைப்பதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.
க.ந: நான் காதலித்தேன்.
நான்: அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?
க.ந: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.
நான்: அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?
க.ந: ஓம்.
நான்: ஏன் ஒருதலைக் காதலா?
க.ந: அப்படியென்றால்?
நான்: நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.
க.ந: நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக் காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு இருந்தது.
நான்: ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் கதைக்கவில்லையா?
க.ந: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் கதைத்திருக்கிறோம்.
நான்: ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் கதைக்கவில்லை?
க.ந: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.
நான்: இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?
க.ந: அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.
நான்: அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?
க.ந: பயம்.
நான்: அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?
க.ந: இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.
நான்: என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே நம்பிக்கையில்லையா?
க.ந: உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள் போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம். குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.
நான்: அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்? நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?
க.ந: அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன். அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
நான்: சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?
க.ந: அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள் இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான் இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத் தெரியும்!
க.ந.வுடன் கதைத்து முடிந்தபின் எனது தலைமுடி ஏராளமாக உதிர்ந்துவிட்டது.
பிறிதொருநாளில் க.ந.வைச் சந்தித்தபோது அவன் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லையா என்று கேட்டேன். தனக்கு இன்னும் பயம் போகவில்லை என்று பதிலளித்தான். கூடவே இந்தப் பிரச்சினைக்கு தன்னிடம் தீர்வில்லையென்றும் சொல்லிவைத்தான்.

காதல் என்பது

காதல் என்பது என்றைக்கும் தளராதது
காதல் என்பது அன்பிலே உருவானது
காதல் என்பது இதயத்தில் பதிவாவது
காதல் என்பது உண்மையின் துணையானது
காதல் என்பது நன்மையில் நிலையானது
காதல் என்பது தூய்மையின் ஊற்றானது
காதல் என்பது உடலிலும் உள்ளத்திலும் இன்பத்தை உருவாக்குவது
காதல் என்பது கடமையை நினைவூட்டுவது
காதல் என்பது எளிமையை ஏற்க வைப்பது
காதல் என்பது போலித்தனத்தைப் போக்கடிப்பது
காதல் என்பது ஐயத்துக் கிடமே இல்லாதது
காதல் என்பது எந்தப் பளுவையும் ஏற்கத் துணிவது
காதல் என்பது இதய பாசத்தின் இருப்பிடமானது
காதல் என்பது மனத்தூய்மையால் மட்டுமே சாகாமல் வாழ்வது
காதல் என்பது காலத்தை வெல்வது
காதல் என்பது கடவுளின் படைப்பின் ஊற்றுப் பணி
காதல் என்பது கட்டுப்பா டுள்ளது
காதல் என்பது கவலையையும் மகிழ்ச்சியாய் மாற்றித் திகழ்வது
காதல் என்பது உயிர்களின் இயக்கத்தின் அடிப்படையானது
காதல் என்பது பொய்யை அறவே விரட்டி நிற்பது
காதல் என்பது இருவர் இணைந்து தாங்கித் தூக்கி உயர்வதற்குதவுவது
காதல் என்பது இன்றைக்கும் இளமையாய் இதயத்தில் வதிவது
காதல் என்பது தித்திக்கும் இனிப்பாய் இறுதிவரை தொடர்வது
காதல் என்பது இன்பமும் துன்பமும் ஒன்றேயென்று உணர்த்துவது

காதல் என்பது எதுவரை?

காதல் என்பது எதுவரை?
காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்.காதல் என்பதுதான் என்ன?எத்தனையோ கவிஞர்கள் எவ்வளவோ பொருள் சொல்லியும் காதல் என்ற இந்த மாயா ஜாலத்தின் பொருள் என்னமோ புரியாத புதிராகவே உள்ளது.
மெத்த படித்த சில அறிஞர்கள் ,"காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படும் ஒருவித ஈர்ப்பு என்ஞ்கின்றனர்.
ஆகா காதல் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமான அத்தியாயம் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த காதலிலே பலவகை உண்டு.
ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் ஒருவரை ஒருவர் பார்கின்றனர்,பேசுகின்றனர்,காதலில் வசப் படுகின்றனர்.
அங்கு என்ன நடக்கின்றது?அந்த ஆண் மகன் பண்பெல்லாம் உருவானவனாக இருக்கின்றான்.தன் உள்ளம் கவர்ந்த அந்த நங்கையைத் தவிர வேறொரு மாதை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவள் முகம் வாட அவன் அதை சகிக்க முடியாமல் கண் கலல்ங்குகிறான்.அவளுக்காக கார் கதவை திறந்து விடுகிறான்,தன் விரல் கூட அவள் மீது படாமல்,"கல்யாணம் ஆகும் வரை உனக்காக காத்திருப்பேன்"என்கிறான்.
அவளோ மெல்ல புன்னகைக்கிறாள்."உங்களை போல அறிவாளி வேறு ஒருவர் உண்டோ?"என்கிறாள்.மெதுவாய்,பேசுகிறாள்,நளினமாய் நடந்து கொள்கிறாள்.இவர்கள் காதல் கல்யாணத்தில் முடிகிறது.
கல்யாணம் ஆகி தம்பதிகளாகிவிட்ட இவர்கள் வாழ்க்கைதான் எப்படி உள்ளது.சற்று ஒதுங்கி இருந்து பார்க்கலாம் வாருங்கள்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன .
அவன் நிதானமாய் எழுந்த்ருக்கிறான்."காபி கொண்டு வா"என்று கத்துகிறான்.அவளோ நைட்டி அணிந்து, கலைந்த தலையுடன்,முகம் கூட கழுவாமல் காபி எடுத்து வந்து கோபத்துடன் நங்கென்று அவன் அருகில் வைக்கிறாள்.
"ரூ காபி எடுத்து வர இத்தனை நேரமாடி?"என்கிறான்,கல்யாணத்திற்கு முன் அவளை தேனே,மானே என்றழைத்த அவன்.அவளோ "க்கும்" என்று முகம் கடுத்த படி செல்கிறாள்.
அடுத்து பாத்ரூமிலிருந்து வெளிப்படும் அவள்,பாத்ரூமை இவ்வளவு அசிங்கமாய் வைத்து விட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனிதனா?"என்கிறாள் ஏளனமாக.
"நான் ஒரு ஆண் .கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல ,அது உன்வேலை"என்கிறான்.அவளோ,"நானும் படித்தவள்.உன்னை விட அதிகம் சம்பாதிப்பவள் .ஞாபகம் இருக்கட்டும்" என்கிறாள்.
இது மாதிரி சண்டைகள் அவர்கள் வில் வலுக்கின்றன.தம்பதிகள் எலியும் பூனையுமகின்றனர்.ஈகோ என்னும் பேய் அவர்களை பிடித்து ஆட்டுகிறது.ஆக வெகு விரைவில் இருவரும்,பிரிந்து போக முடிவெடுத்து கோர்ட்டை அணுகுகின்றனர்.மண்டபத்தில் ஆரம்பித்த மண வாழ்க்கைகோர்ட்டில் முடிகிறது..பிறந்து சில காலமே ஆவதற்குள் மடிந்து போன இந்த காதலின் சமாதியில் ஒரு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு,வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
அவன் ஒரு வியாபாரி,அவள் ஒரு வியாபாரியின் மகள்.இருவரும் மணமக்கள்.
தன் அருகில் அமர்ந்திருக்கும் அவளை அவன் ஜாடையாய் பார்க்கிறான்."பெண் நல்ல கலர் என்று சொன்னார்கள்.இவளோ கவிழ்த்து போட்ட வெந்நீர் தவலை போல இருக்கிறாள்.சரி.எந்த நிறமாயிருந்தால் என்ன.பணக்கார வீட்டு பெண்ண.இருட்டிலே வேல்லைஎன்ன கறுபென்ன ,எல்லா கழுதையும் ஒன்றுதான் "என்று ஏளனமாய் சிரித்து கொள்கிறான்.அவளோ,"மாப்பிள்ளை ரொம்ப பணக்காரன் என்று சொன்னார்கள் ஆனால் இவர் அம்மாவை பார்த்தால் பரதேசி போல் இருக்கிறாள்.என்னிடம் அவள் வம்பு செய்தால் நான் தனி குடித்தனம் போக வேண்டியதுதான்"என்று மனதிற்குள் கறுவுகிறாள்.
இவர்கள் மணவாழ்க்கை தொடங்குகிறது.
ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடுகின்றனர்.
"நீ ஒரு பேய்"என்கிறான் அவன் ."நீர் ஒரு தரித்திரம் பிடித்த மனிதன்"என்கிறாள் அவள்.காலம் இப்படியே செல்கிறது.உடல்கள் இணைகின்றன.உள்ளங்கள் விலகி வெகு நாட்களாகி விட்டன.பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனால் அவர்களுக்குள் வெறுப்புதான் வளருகிறது.அவன் மறந்து போயும் அவளுக்காக ஒரு முழம் பூ கூட தன் கையால் வங்கி வருவதில்லை.அவளோ,அவன் ஜுரம் வந்து படுத்த போதும் தன் கையால் கஞ்சி கூட போட்டு தருவதில்லை.
பிள்ளைகள் சிறகுகள் முளைத்து பறந்து செல்லுகின்றனர்.இவர்கள் வாழ்கை வெறுப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிகிறது.பிறக்கும் முன்னரே வெம்பி வதங்கி செத்து விட்ட இந்த காதலுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட்டீர்களா?சரி வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
ஒரு திருமண மண்டபம்.அவனும் அவளும் அழகாக அமர்ந்திருக்கின்றனர் அருகருகே.பின் ,"நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோ" என்று மனமெல்லாம் உவகை போங்க அவன் கரம் பற்றுகிறாள் அவள்.
"இனி நீதான் என் உயிர்.என் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவள் நீ.உண் மகிழ்ழ்சியே என் மகிழ்ச்சி "என்று எண்ணியபடி,அவள் கரம் பிடித்து அக்னி சாட்சியாய் அவளை தன் மனைவியாக்கி கொள்கிறான் அவன்.
இவர்கள் "அறமெனப் பட்டதே இல் வாழ்க்கை"என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்கின்றனர்.
அவனது சுக துக்கத்தில் பங்கேற்கிறாள் அவள்."ஒரு பிரச்னை"என்று அவன் முகம் வாடும்போது,"வருந்தாதீர்,நானிருக்கிறேன்"என்கிற ாள் அவள்.இரு மனமும் ஒருமனமாய் கலக்க தெய்வ சன்னதியில் விளக்கேற்றி வைத்தார் போல் இருவரும் ஒருங்கிணைய அருமையான பிள்ளைகள் பிறந்து அவர்களுக்கு பெருமை தேடி தருகின்றனர்.
தங்கள் கடமைகளை எல்லாம் செவ்வனே செய்து முடித்த இவர்களை முதுமை வந்து அடைகிறது.அவன் தலை வழுக்கையாகிறது,பார்வை மங்குகிறது,குரல் நடுங்குகிறது.அவள் தலை தும்பையாய் நரைக்கிறது,உடல் சுருங்குகிறது.ஆனாலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்த அவர்கள் காதல் மட்டும் நாளுக்கு நாள் வலுவடைகிறது.இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் இறுக்கமாய் பிடித்தபடி வாழ்கை பயணத்தை நடத்துகின்றனர்.
"கண்ணே,நீ மிகவும் களைத்து விட்டாய்.என் தோள் மீது சாய்ந்து கொள்"என்கிறான் அவன். "நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது.நீங்கள்தான் இளைத்து விட்டேர்கள்.துவண்டு விட்டீர்கள்.சற்று என் மடி மீது தலை வைத்து இளைபாருங்கள்"என்கிறாள் அவள்.
அவர்கள் பயணம் தொடர்கிறது.
இருவருன் ஒன்றாய் வரவில்லை ஒன்றாக போவதற்கு.அவன் பயணம் முடிந்து விடுகிறது.அவள் பயணம் தொடர்கிறது,தன்னம் தனியாளாக அவள் நடக்கிறாள்.
ஆனால் அவள் மனம் விழவில்லை."என் மனதில் அவர் ஏற்றி வைத்த காதல் என்ற தீபம் இன்னமும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.அந்த ஒளி தரும் வெளிச்சத்தில் நான் என் பயணத்தை தொடர்வேன்.என் அவர் எப்போதும் என்னோடு இருந்து எனக்கு வழி காட்டுவார்,என் நேரம் வரும் பொது என்னை தன்னிடம் அழைத்து கொள்வார்"என்று திண்ணமாய் எண்ணியபடி மெதுவாய் நடக்கிறாள் அவள்.
இது காதல் இல்லை என்றால் வேறு எது அய்யா காதல்?
கவிஞர் கண்ணதாசன் ஒரு கேள்வி
கேட்டார்,"காதல் என்பது எதுவரை?"என்று. பின் தானே அதற்கும் அருமையாய் பதிலளித்தார்,"இளமையிலே காதல் வரும்,எது வரையில் கூட வரும்,முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்" என்று முதுமையிலே நீடிக்கும் காதல் நம் வாழ்க்கையில் மணம் வீசும் காதல்.ஆல மரம் போல் வேர் ஊன்றி நிற்கும் காதல்.காலத்தையும் வென்றது இவ்வகை காதல்.

வாழ்க காதல்.

வாழ்க தமிழ்.

வளர்க தமிழர் பண்பாடு.