Sunday, May 23, 2010

நான் தேடும் செவ்வந்தி பூவிது

பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

Monday, May 17, 2010

எது காதல்?

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே மலருவதாகச் சொல்லப்படும் காதல் என்பதைப் பற்றி, இது நாள் வரை எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது; சொல்லப்பட்டு விட்டது. மனித இனம், காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளாய் வாழ்ந்து கொண்டிருந்த புராதன பொதுவுடமைக் காலத்தில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது நிலைமையே வேறு. அது அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும், மனுஷிகளுக்குமான கட்டாயப் பாடமாகிவிட்டது. காதல் புரிகிறவர்கள், காதலைப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியம் அற்றுப் போய், தான் புரிவதுதான் காதல், தான் புரிந்துகொண்டதுதான் காதல் என்று பறைசாற்றும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்என்கிற எப்போதோ யாருக்கோ எழுதப்பட்ட வசனம்தான் தற்போதைய தமிழ் காதல் உலகின் தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாம் கொண்டிருக்கும் காதல் மட்டுமே புனிதமானது. அடுத்தவரின் காதலை விடவும் உயர்ந்தது எனும் எண்ணம் அனைத்துக் காதலர்களின் மனத்திலும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை எதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் மனோபாவம் பற்றியும் கவலைப்படாமல், வெறும் கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால் இன்றைய காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை என்பதே நூறு சதவிகிதம் காதல் மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில் தோல்வியடைகிறார்கள்.

காதல் என்பது நெருங்கி வரும்போது முகமூடிகளைப் பரஸ்பரம் கிழித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாகும். அதனால்தான் தனித்தனி வீடுகளில் இனிய காதலர்களாக வாழ்ந்தவர்கள், ஒரே வீட்டில் தம்பதிகளாகச் சேரும்போது தாறுமாறாகித் தகராறு செய்து கொண்டு பிரிவதை நாம் நிறையவே காணமுடிகிறது. உலகப் புகழ் பெற்ற எத்தனையோ காதல் ஜோடிகள் பிரிவதற்காகவேதிருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். காவியக் காதலர்களான அம்பிகாபதியும் அமராவதியும் திருமணம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பிரிந்திருப்பார்கள் என்று விவாக ரத்துபெற்றவர்கள் வாதிடுவதுண்டு.

காதலில் தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்று சொல்லப்படுவது போலவே எல்லாக் காதல்களும் பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு பல்வேறு முகமூடிகளுடன் பவனி வருகின்றன. அதில் வெற்றி கிட்டிய பிறகு அதன் போக்கில் ஒரு மந்தமும், சலிப்பும் மேலிட்டு விடுகிறது. நினைக்கும்போது இனித்த காதல், கிடைக்கும்போது கசந்து விடுகிறது.

காதல் தோல்வி, காதல் மோசடி, காதல் கொலை என்பன போன்ற நிலைகளில் காதல் உலகில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளுக்கும் காரணம் அது இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதுதான். தூரத்தில் இருந்து கண்ணோடு கண் நோக்கும்போதே மலர்ந்துவிடுகிற காதல் நெருங்கிப் பழகும்போது பரஸ்பரம் முகமூடியைக் கிழித்துக் கொண்டு கோரமாக வெளிப்பட்டுச் செயலாற்றுகிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களாலும், பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களாலும் நாடகங்களாலும், கவிதைகளாலும் காதலைப் பற்றிய கணிப்புகள் இங்கே தாறுமாறாகப் பரப்பி விடப்பட்டிருக்கிறது. அதிலும் இன்றைய பெரும்பாலான திரைப்படங்கள் காதலையே முதுகெலும்பாகக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படத் தத்துவங்கள் போலியானவை; பொய்யானவை. தமிழ்த் திரைப்படங்களில் ஆண்-பெண் இருவரிடையே காதல் மலருவதற்கான காரணங்கள் மிகவும் அற்பமாகவும் அவலமாகவும் காட்டப்படுகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தான் காதலிக்கும் பெண்ணைப் பாட்டுப் பாடி கேலி செய்வது முதற் கொண்டு அவளின் தொப்புளில் ஆம்லெட்போடுவது வரை ஏராளமான அசிங்கங்கள் காதலின் வெளிப்பாடாகக் காட்டப் படுகின்றன. ஒருத்தனை மனசுல நெனச்சிகிட்டு நான் இன்னொருத்தன் கூட எப்படி வாழ முடியும்?” என்பதுதான் திரைப்படக் காதலிகளின் கவலை தோய்ந்த காதல் வசனமாக இருக்கிறது. அந்தக் கவலையில் துளியளவும் உண்மையில்லை என்பதுதான் நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சிகளாக இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் வாயிலாக, இதுதான் காதல் என்று எதையெதையோ கூவி விற்கிறார்கள்.

சாதி, மதம், இனம், மொழி, பணம் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது காதல் என்று தத்துவம் சொல்லி காதலர்களைச் சேர்த்து வைக்கிற வேலையைக் காலங் காலமாகச் செய்து வருகிற இவர்கள், இவையெல்லாம் உங்கள் வாழ்வில் குறுக்கிடும்போதும் உங்களிடமிருந்தே முளைக்கும் போதும் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்பதில்லை. இப்படியெல்லாம் சமாளியுங்கள் என்று பதில் சொல்வதுமில்லை. ஏனெனில் இத்தகைய விவாதங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்கிற முடிவு இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விரசத்தில் விம்முகிற கதாநாயகியின் மார்புகள்தான் இங்கே காண்பதற்கினிய காதல் காட்சிகளாக அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.

காதல் என்பது நெருப்பு’, ‘காதல் என்பது இருட்டுஎன்பன போன்று காதலைப் பற்றி எத்தனையோ பேர் ஏதேதோ புலம்பினார்கள். ஆனால், மார்க்ஸ் மட்டும்தான் காதல் என்பது மனித நேயம்என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அதன்படி ஜென்னியுடன் அவர் வாழ்ந்தும் காட்டினார். ஆழ்ந்த மனித நேயத்தின் வெளிப்பாடாக இருவரிடையே காதல் மலரும்போது வாழ்க்கை அவர்களைப் புரட்டிப் போடுவதில்லை. பிரித்துவிடுவதுமில்லை.

Sunday, May 16, 2010

Tamil Anthem 2010

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!



Friday, May 14, 2010

மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.

வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.

மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.

இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

Wednesday, May 12, 2010

ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை!


தான் சார்ந்த சமுதாயம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடைமைகள் போன்றவற்றை எப்போதும் மறக்காமல் இருப்பவர்தான் சிகரங்களைத் தொடுகிறார். சமூகம் தன்னைக் காயப்படுத்தினாலும், பதிலுக்கு கனியைத் தருகிற மனம் உள்ளவர்களே மிகச் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகிறார்…

அப்படி ஒரு மனிதர்தான் ரஜினிகாந்த். முன்பு தினந்தந்தியில் வெளியான அவரது கட்டுரையொன்றை மீண்டும் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையை இங்கே திரும்பத் தருவது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தலைவரின் சிந்தனையைப் புரிந்து கொள்ள இது உதவும்.

அந்தக் கட்டுரை:
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.

இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள்… என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.

வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.

நீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு “ஏ.சி” ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.

இறைவனையும் இயற்கையையும் புரிந்து கொள்ளாத மனிதன்!

நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப் போய்விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.

அதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.

சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.

பணம் இருந்தா போதுமா…

நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.

பிரச்சினைகள் வரும்போது அது பணப் பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக் கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.

அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.

தவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் – மனதில்தான் இருக்கிறார்.

மனதில் ஒன்று… வெளியில் ஒன்று எனப் பேசும் இயல்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

நான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை “வந்தவரை வாழ வைத்த தமிழகம்” என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

ஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி…”

Monday, May 10, 2010

உன்னாலே உன்னாலே படம் அறிஉரை

உன்னாலே உன்னாலே படம் (விமர்சனம் பின்னர் எப்பொழுதாவது!) பார்த்தபின் நானும் க.ந.(சு- இல்லை!)வும் பேசிக் கொண்டதை இயன்றவரை இங்கே எழுத்து வடிவமாக்கியிருக்கின்றேன். எனக்கு மட்டும் தெரிந்த (பிரபலமல்லாதவன்) நண்பன் க.ந. என்பதால் அவன் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்திருக்கின்றேன்.

நான்: (படத்தில்) நல்ல முடிவு. புரியாமல் சேர்வதைவிட புரிந்து பிரிந்துவிடலாம்.
க.ந: காதல் என்பதே பிரிந்திருப்பதுதான்.
நான்: பிரிந்தால்தான் காதலா?
க.ந: சேர்ந்தால் காதல் இல்லை.
நான்: காதலிப்பது ஒருவராகவும், கல்யாணம் செய்துகொள்வது வேறொருவராகவும் இருக்க வேண்டுமா?
க.ந: நான் அப்படிச் சொல்லவில்லை. காதல் கல்யாணத்தின் பின் செத்துவிடுகிறது.
நான்: கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?
க.ந: காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல் மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.
நான்: காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?
க.ந: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.
நான்: பொதுமைப்படுத்திக் கதைப்பதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.
க.ந: நான் காதலித்தேன்.
நான்: அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?
க.ந: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.
நான்: அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?
க.ந: ஓம்.
நான்: ஏன் ஒருதலைக் காதலா?
க.ந: அப்படியென்றால்?
நான்: நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.
க.ந: நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக் காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு இருந்தது.
நான்: ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் கதைக்கவில்லையா?
க.ந: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் கதைத்திருக்கிறோம்.
நான்: ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் கதைக்கவில்லை?
க.ந: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.
நான்: இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?
க.ந: அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.
நான்: அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?
க.ந: பயம்.
நான்: அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?
க.ந: இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.
நான்: என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே நம்பிக்கையில்லையா?
க.ந: உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள் போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம். குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.
நான்: அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்? நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?
க.ந: அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன். அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
நான்: சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?
க.ந: அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள் இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான் இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத் தெரியும்!
க.ந.வுடன் கதைத்து முடிந்தபின் எனது தலைமுடி ஏராளமாக உதிர்ந்துவிட்டது.
பிறிதொருநாளில் க.ந.வைச் சந்தித்தபோது அவன் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லையா என்று கேட்டேன். தனக்கு இன்னும் பயம் போகவில்லை என்று பதிலளித்தான். கூடவே இந்தப் பிரச்சினைக்கு தன்னிடம் தீர்வில்லையென்றும் சொல்லிவைத்தான்.

காதல் என்பது

காதல் என்பது என்றைக்கும் தளராதது
காதல் என்பது அன்பிலே உருவானது
காதல் என்பது இதயத்தில் பதிவாவது
காதல் என்பது உண்மையின் துணையானது
காதல் என்பது நன்மையில் நிலையானது
காதல் என்பது தூய்மையின் ஊற்றானது
காதல் என்பது உடலிலும் உள்ளத்திலும் இன்பத்தை உருவாக்குவது
காதல் என்பது கடமையை நினைவூட்டுவது
காதல் என்பது எளிமையை ஏற்க வைப்பது
காதல் என்பது போலித்தனத்தைப் போக்கடிப்பது
காதல் என்பது ஐயத்துக் கிடமே இல்லாதது
காதல் என்பது எந்தப் பளுவையும் ஏற்கத் துணிவது
காதல் என்பது இதய பாசத்தின் இருப்பிடமானது
காதல் என்பது மனத்தூய்மையால் மட்டுமே சாகாமல் வாழ்வது
காதல் என்பது காலத்தை வெல்வது
காதல் என்பது கடவுளின் படைப்பின் ஊற்றுப் பணி
காதல் என்பது கட்டுப்பா டுள்ளது
காதல் என்பது கவலையையும் மகிழ்ச்சியாய் மாற்றித் திகழ்வது
காதல் என்பது உயிர்களின் இயக்கத்தின் அடிப்படையானது
காதல் என்பது பொய்யை அறவே விரட்டி நிற்பது
காதல் என்பது இருவர் இணைந்து தாங்கித் தூக்கி உயர்வதற்குதவுவது
காதல் என்பது இன்றைக்கும் இளமையாய் இதயத்தில் வதிவது
காதல் என்பது தித்திக்கும் இனிப்பாய் இறுதிவரை தொடர்வது
காதல் என்பது இன்பமும் துன்பமும் ஒன்றேயென்று உணர்த்துவது

காதல் என்பது எதுவரை?

காதல் என்பது எதுவரை?
காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்.காதல் என்பதுதான் என்ன?எத்தனையோ கவிஞர்கள் எவ்வளவோ பொருள் சொல்லியும் காதல் என்ற இந்த மாயா ஜாலத்தின் பொருள் என்னமோ புரியாத புதிராகவே உள்ளது.
மெத்த படித்த சில அறிஞர்கள் ,"காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படும் ஒருவித ஈர்ப்பு என்ஞ்கின்றனர்.
ஆகா காதல் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமான அத்தியாயம் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த காதலிலே பலவகை உண்டு.
ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் ஒருவரை ஒருவர் பார்கின்றனர்,பேசுகின்றனர்,காதலில் வசப் படுகின்றனர்.
அங்கு என்ன நடக்கின்றது?அந்த ஆண் மகன் பண்பெல்லாம் உருவானவனாக இருக்கின்றான்.தன் உள்ளம் கவர்ந்த அந்த நங்கையைத் தவிர வேறொரு மாதை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவள் முகம் வாட அவன் அதை சகிக்க முடியாமல் கண் கலல்ங்குகிறான்.அவளுக்காக கார் கதவை திறந்து விடுகிறான்,தன் விரல் கூட அவள் மீது படாமல்,"கல்யாணம் ஆகும் வரை உனக்காக காத்திருப்பேன்"என்கிறான்.
அவளோ மெல்ல புன்னகைக்கிறாள்."உங்களை போல அறிவாளி வேறு ஒருவர் உண்டோ?"என்கிறாள்.மெதுவாய்,பேசுகிறாள்,நளினமாய் நடந்து கொள்கிறாள்.இவர்கள் காதல் கல்யாணத்தில் முடிகிறது.
கல்யாணம் ஆகி தம்பதிகளாகிவிட்ட இவர்கள் வாழ்க்கைதான் எப்படி உள்ளது.சற்று ஒதுங்கி இருந்து பார்க்கலாம் வாருங்கள்.
திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன .
அவன் நிதானமாய் எழுந்த்ருக்கிறான்."காபி கொண்டு வா"என்று கத்துகிறான்.அவளோ நைட்டி அணிந்து, கலைந்த தலையுடன்,முகம் கூட கழுவாமல் காபி எடுத்து வந்து கோபத்துடன் நங்கென்று அவன் அருகில் வைக்கிறாள்.
"ரூ காபி எடுத்து வர இத்தனை நேரமாடி?"என்கிறான்,கல்யாணத்திற்கு முன் அவளை தேனே,மானே என்றழைத்த அவன்.அவளோ "க்கும்" என்று முகம் கடுத்த படி செல்கிறாள்.
அடுத்து பாத்ரூமிலிருந்து வெளிப்படும் அவள்,பாத்ரூமை இவ்வளவு அசிங்கமாய் வைத்து விட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனிதனா?"என்கிறாள் ஏளனமாக.
"நான் ஒரு ஆண் .கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல ,அது உன்வேலை"என்கிறான்.அவளோ,"நானும் படித்தவள்.உன்னை விட அதிகம் சம்பாதிப்பவள் .ஞாபகம் இருக்கட்டும்" என்கிறாள்.
இது மாதிரி சண்டைகள் அவர்கள் வில் வலுக்கின்றன.தம்பதிகள் எலியும் பூனையுமகின்றனர்.ஈகோ என்னும் பேய் அவர்களை பிடித்து ஆட்டுகிறது.ஆக வெகு விரைவில் இருவரும்,பிரிந்து போக முடிவெடுத்து கோர்ட்டை அணுகுகின்றனர்.மண்டபத்தில் ஆரம்பித்த மண வாழ்க்கைகோர்ட்டில் முடிகிறது..பிறந்து சில காலமே ஆவதற்குள் மடிந்து போன இந்த காதலின் சமாதியில் ஒரு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு,வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
அவன் ஒரு வியாபாரி,அவள் ஒரு வியாபாரியின் மகள்.இருவரும் மணமக்கள்.
தன் அருகில் அமர்ந்திருக்கும் அவளை அவன் ஜாடையாய் பார்க்கிறான்."பெண் நல்ல கலர் என்று சொன்னார்கள்.இவளோ கவிழ்த்து போட்ட வெந்நீர் தவலை போல இருக்கிறாள்.சரி.எந்த நிறமாயிருந்தால் என்ன.பணக்கார வீட்டு பெண்ண.இருட்டிலே வேல்லைஎன்ன கறுபென்ன ,எல்லா கழுதையும் ஒன்றுதான் "என்று ஏளனமாய் சிரித்து கொள்கிறான்.அவளோ,"மாப்பிள்ளை ரொம்ப பணக்காரன் என்று சொன்னார்கள் ஆனால் இவர் அம்மாவை பார்த்தால் பரதேசி போல் இருக்கிறாள்.என்னிடம் அவள் வம்பு செய்தால் நான் தனி குடித்தனம் போக வேண்டியதுதான்"என்று மனதிற்குள் கறுவுகிறாள்.
இவர்கள் மணவாழ்க்கை தொடங்குகிறது.
ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடுகின்றனர்.
"நீ ஒரு பேய்"என்கிறான் அவன் ."நீர் ஒரு தரித்திரம் பிடித்த மனிதன்"என்கிறாள் அவள்.காலம் இப்படியே செல்கிறது.உடல்கள் இணைகின்றன.உள்ளங்கள் விலகி வெகு நாட்களாகி விட்டன.பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனால் அவர்களுக்குள் வெறுப்புதான் வளருகிறது.அவன் மறந்து போயும் அவளுக்காக ஒரு முழம் பூ கூட தன் கையால் வங்கி வருவதில்லை.அவளோ,அவன் ஜுரம் வந்து படுத்த போதும் தன் கையால் கஞ்சி கூட போட்டு தருவதில்லை.
பிள்ளைகள் சிறகுகள் முளைத்து பறந்து செல்லுகின்றனர்.இவர்கள் வாழ்கை வெறுப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிகிறது.பிறக்கும் முன்னரே வெம்பி வதங்கி செத்து விட்ட இந்த காதலுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட்டீர்களா?சரி வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
ஒரு திருமண மண்டபம்.அவனும் அவளும் அழகாக அமர்ந்திருக்கின்றனர் அருகருகே.பின் ,"நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோ" என்று மனமெல்லாம் உவகை போங்க அவன் கரம் பற்றுகிறாள் அவள்.
"இனி நீதான் என் உயிர்.என் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவள் நீ.உண் மகிழ்ழ்சியே என் மகிழ்ச்சி "என்று எண்ணியபடி,அவள் கரம் பிடித்து அக்னி சாட்சியாய் அவளை தன் மனைவியாக்கி கொள்கிறான் அவன்.
இவர்கள் "அறமெனப் பட்டதே இல் வாழ்க்கை"என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்கின்றனர்.
அவனது சுக துக்கத்தில் பங்கேற்கிறாள் அவள்."ஒரு பிரச்னை"என்று அவன் முகம் வாடும்போது,"வருந்தாதீர்,நானிருக்கிறேன்"என்கிற ாள் அவள்.இரு மனமும் ஒருமனமாய் கலக்க தெய்வ சன்னதியில் விளக்கேற்றி வைத்தார் போல் இருவரும் ஒருங்கிணைய அருமையான பிள்ளைகள் பிறந்து அவர்களுக்கு பெருமை தேடி தருகின்றனர்.
தங்கள் கடமைகளை எல்லாம் செவ்வனே செய்து முடித்த இவர்களை முதுமை வந்து அடைகிறது.அவன் தலை வழுக்கையாகிறது,பார்வை மங்குகிறது,குரல் நடுங்குகிறது.அவள் தலை தும்பையாய் நரைக்கிறது,உடல் சுருங்குகிறது.ஆனாலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்த அவர்கள் காதல் மட்டும் நாளுக்கு நாள் வலுவடைகிறது.இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் இறுக்கமாய் பிடித்தபடி வாழ்கை பயணத்தை நடத்துகின்றனர்.
"கண்ணே,நீ மிகவும் களைத்து விட்டாய்.என் தோள் மீது சாய்ந்து கொள்"என்கிறான் அவன். "நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது.நீங்கள்தான் இளைத்து விட்டேர்கள்.துவண்டு விட்டீர்கள்.சற்று என் மடி மீது தலை வைத்து இளைபாருங்கள்"என்கிறாள் அவள்.
அவர்கள் பயணம் தொடர்கிறது.
இருவருன் ஒன்றாய் வரவில்லை ஒன்றாக போவதற்கு.அவன் பயணம் முடிந்து விடுகிறது.அவள் பயணம் தொடர்கிறது,தன்னம் தனியாளாக அவள் நடக்கிறாள்.
ஆனால் அவள் மனம் விழவில்லை."என் மனதில் அவர் ஏற்றி வைத்த காதல் என்ற தீபம் இன்னமும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.அந்த ஒளி தரும் வெளிச்சத்தில் நான் என் பயணத்தை தொடர்வேன்.என் அவர் எப்போதும் என்னோடு இருந்து எனக்கு வழி காட்டுவார்,என் நேரம் வரும் பொது என்னை தன்னிடம் அழைத்து கொள்வார்"என்று திண்ணமாய் எண்ணியபடி மெதுவாய் நடக்கிறாள் அவள்.
இது காதல் இல்லை என்றால் வேறு எது அய்யா காதல்?
கவிஞர் கண்ணதாசன் ஒரு கேள்வி
கேட்டார்,"காதல் என்பது எதுவரை?"என்று. பின் தானே அதற்கும் அருமையாய் பதிலளித்தார்,"இளமையிலே காதல் வரும்,எது வரையில் கூட வரும்,முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்" என்று முதுமையிலே நீடிக்கும் காதல் நம் வாழ்க்கையில் மணம் வீசும் காதல்.ஆல மரம் போல் வேர் ஊன்றி நிற்கும் காதல்.காலத்தையும் வென்றது இவ்வகை காதல்.

வாழ்க காதல்.

வாழ்க தமிழ்.

வளர்க தமிழர் பண்பாடு.

Saturday, May 8, 2010

Call 28150700 If you happended to See Road Accident

At Chennai.....

If you happen to see/witness/involve in an accident,
you have two OPTIONS;

Option 1: If you have time &   Intention you can;

1. Take the victims to nearby hospital.

2. Provide first aid to the victims.

3. Help the victim to recover conscious -   if the
injury is minor /negligible

Option 2: If you have NO time, but have the
intention, you can;

1. Just dial 28150700 and inform them about the
accident and place, REST THEY WILL TAKE CARE.

2. The above number   belongs to Trauma care
consortium is a non profitable organization and they
help people who need medical facilities because of a
ROAD accident.


 

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது : ஒரு க்ரைம் ரிப்போர்ட்

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில் தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

எப்படி கலப்படங்கள் நடக்கின்றன அவற்றின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.
* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.
* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.
*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.
* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.
* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.
* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.
* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.
* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.
* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.
* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

கலப்படத்தை எப்படி கண்டறியலாம் : மதுரை கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில், 1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.

Web application Performance First Aid

Below I tried to list down a few question or hints to focus whenever there is performance issue.

Front end:
1. Is page too heavy?
2. Is content poorly cached?
3. Is content not compressed?
4. Is javascript & css minified?
5. Combine CSS and JS files to reduce the number request for these resources
6. Is there any inline javascript or CSS – move it to external file?
7. Place the javascript and css appropriately
      1. Javascript at the end of the body
      2. CSS at the head.
8. Can static content like CSS and JS be akamized?
9. Restructure the folder and enable cache by folders like css, js, image and set the cache setting at these folders at webservers
10. Can resources be pre-fetched like we expect user to click a few links and we can preload those image in the home page.
11. Can content be published to CDN?
12. Is CDN configured appropriately?
13. Can image be compressed? Smushit?
14. Can we use multiple domain for resources for simultaneous downloads?
15. Cookies less domain for image resources?
16. Can we club images using the CSS-Sprite technique?
17. Sometime ETAG can cause issue, different server have a way to manage this
18. Scope of AJAX-fying the pages
19. Cookie size
20. Is number of request per page back to server including all resources in acceptable range around 15-20? Is it possible to reduce it?
21. Has the page been tested in low bandwidth scenario?
22. Is it possible to host the resource server separate from the main web server?
23. Use appropriate robot.txt to avoid search engine traffic
24. Using libraries to deal with DOM like JQuery etc

Middle tier
1. What is the technology stack?
   1. Tech specific optimization
2. Scope of web server caching?
3. Response buffering
4. Page and control fragment caching
5. Façade approach – in case of multiple service call can be clubbed
6. Is there any web service call, wsdl caching issue?
7. Is it possible to segregate anonymous and non-anonymous pages?
8. Is there any integration services
9. Is there any 3rd party system integration
10. Is it using Store-proc or can application use store proc?
11. Reverse proxy to manage the static content
12. Enable HTTP Keep-alive
13. Excessive logging
14. Distributed Caching in case of load balanced environment

 Give a shot to backend
1. Store procedure usage
2. Indexing and index column data types
3. Is Database statistics up to date?
4. Check defragmentation
5. Choosing approach log level. In case of SQL server we have simple, full etc mode.
6. Archiving to reduce the records
7. Choosing database inserts over updates if possible
8. High I/O queries
9. High table scan queries
10. In case database like MySQL – can we use appropriate engine for different kind of tables?

Tool to analyze
1. Measure the front end application - Yslow or PageSpeed plug-in for firefox
2. Measure the application middle tier
   1. Performance monitor log
       1. Web server specific
             1. Request Per second
             2. Request Queue
             3. Request Processing Time
             4. Request Errors
             5. Cache Hit
        2. Disk I/O 
        3. Peek memory usage
        4. Peek CPU usage
3. Measure the backend layer
  1. SQL Profiling in case of MS SQL
  2. CPU usage
  3. Logical and Physical Reads
  4. Execution Time
  5. Monitor for DB Locks
  6. Analyze slow running queries using execution plan


See if we can do anything without code change:

1. Server changes
Restructure the folder and enable cache by folders like css, js, image and set the cache setting at these folders
Gzip the content
Reverse proxy to reduce traffic on primary server
Separate the resource request and page request in to 2 farms – like media farm (hosts media content like images, files, videos etc) and web farm (host the main application)
2. Database
Index fine tuning
Statistic updates
Optimizing top 10 slowest queries :)
3. Infrastructure upgrade
Upgrade the server system configuration

பணவீக்கமும் மன வீக்கமும்

1997ல் உங்கள் வாழ்வில் என்ன மாறுபாடு ஏற்பட்டது? 1998, 2003, 2004, 2009 போன்ற ஆண்டுகளில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்று கூறிவிட வேண்டாம்.

நிறுவனங்களின் பங்குதாரர்கள் மனம் மாறுவது, துரோகம் செய்வது, குடும்பங்கள் பிரிவது, விவாகரத்து, காதல் முறிவு, கள்ளத் தொடர்புகள் என்று எத்தனையோ அம்சங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

1997ல் ப.சிதம்பரம் கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த ஆண்டு பணவீக்கம் நிலையாக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் வருமான வரி ஏமாற்றியவர்கள் தாமாக முன் வந்து தங்கள் கணக்குகளைக் காட்ட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

1998ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

2003ல் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

2004ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 2009ல் மீண்டும் அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பொருளாதார மன நிலைகளை மட்டும் மாற்றுவதில்லை. தனிப்பட்ட உணர்வுகள் என்று கூறப்படும் உணர்வுகளை அவை தாக்குகின்றன.

காசு, பணம் மனிதனை மாற்றிவிடுகிறது என்ற பொருளில் இது கூறப்படவில்லை.

பொருளாதார இயக்கங்களுக்கு மாற்றாக, பதிலியாக மன உணர்வுகள் மாறிவிடுகின்றன.

பொய் சொல்வது, உண்மையைச் சொல்லாமல் இருப்பது, புது ஈர்ப்புகள் கொள்வது, புது தோழமை தேடுவது, அதற்கான தேடலில் இருப்பது, அதை மறைப்பது, மறைப்பதாகச் சொல்லாமல் இருப்பது, நிலை மாறுவது, அதற்கான நியாயங்களைப் புனைந்துகொள்வது, புனைவை நியாயப்படுத்துவது, விருப்பத்தை நிர்ப்பந்தம் என்று காட்டுவது, முடிவுகளைத் தாக்கங்களாக மாற்றுவது என்று பல வித தர்க்கங்களை மனம் கொண்டுவிடுகிறது.

பொருளாதார அளவுமானிகள் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எப்போதும் கணக்கிடப்படுகின்றன.

ஒரு அமைப்பின் உணர்வுரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கணிக்க பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

குடும்பங்கள் சிதைவது, பல உறவுகளை ஆணும் பெண்ணும் கொள்வது, கல்வி, தொழிலில் ஏமாற்றம் காரணமாக தற்கொலை செய்துகொள்வது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவர பல பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன. அதற்குள் உணர்வின் விதை வெடித்து மரமாகி காடாகிவிடுகிறது.

டெலுஸ்-கிடாரி எழுதிய ‘ஆண்டி-இடிபஸ்’ என்ற ‘இடிபஸுக்கு எதிராக’ என்ற நூலின் அடிக் குறிப்பு, ‘முதலாளித்துவமும் மனச்சிதைவும்’ என்பதாகும்.

முதலாளித்துவம் என்பதே மனச்சிதைவுதான். அதை மனச்சிதைவாக அறிந்துகொள்ளாதபடி அதை நோக்கி எல்லோரையும் அது நகர்த்திக்கொண்டிருக்கிறது.

உறுப்புகள் இல்லாத உடல் என்று மனிதனை டெலுஸ்-கிடாரி வர்ணிக்கிறார்கள்.

மனிதனின் உறுப்புகளாக வெளி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மனிதனின் மூளையாக பொருளாதார அமைப்பும் அதிகாரமும் மாறிவிட்டன.

ஒரு தனிமனித இயக்கத்தை இவை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

சிரிப்பு, அழுகை, பதற்றம், பரிதவிப்பு என்று அனைத்தும் சமூக எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் புதுக் கடன் கொள்கை அறிவித்தார். அதில் ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் தரும் கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கும் தொகை விகிதமும் உயர்த்தப்பட்டது. இதனால் பணப் புழக்கம் குறையும்.

இதனால் மனம் மாறிவிடாது என்று கூறிவிட முடியாது.

உறுப்புகள் அற்ற உடல் எப்போதும் மாற்று உறுப்புகளுக்கான தயாரிப்பில் இருக்கிறது.

அவை கிடைக்காமலா போய்விடும்?

தலையணை மந்திரங்கள்-16

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன்இ உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
 
1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.

10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.

14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

தேநீர்'... சில உண்மை!

`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...

* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத்தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

 *ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ`யும், `சிலோன் டீ`யும் இதமளிக்கும்.

*`கிரீன் டீ`யில் உள்ள `பாலிபினால்கள்` அல்லது `பிளேவனாய்டுகள்` ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத்தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்` உதவுகின்றன.

*`மூலிகை டீ`யில் `டேனின்` இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.

* `இஞ்சி டீ` கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.

*`அஸ்வகந்தா டீ` மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

* டீயுடன் `ஸ்வீட் ரூட்` அல்லது `லீகோரைஸை` சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.

* ஏலக்காய் டீயை எவர் விரும்பமாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப்புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்லசுவையாகவும் இருக்கும்.

Friday, May 7, 2010

BOOK - BEING THE BEST- Part 1 (A - Attention)

A IS ATTENTION. It’s where the art of being successful starts; all twenty-five other characteristics are dependent upon this one. To be successful at something, to be able to say “yes, I achieved that” or “yes, I can do that now” or “finally, I’m on the path which I wanted” we must give it – whatever we want – attention. Attention means we give our desire, our goal, three types of focus: appropriate dedicated time, appropriate dedicated energy and appropriate dedicated mindset. Without the consistent application of these three factors we are unlikely to achieve our goal; success will not be ours.

 
Isn’t it a fairly obvious point? Well, not necessarily. In this increasingly busy world we have become very good at thinking and talking about changes we wish to make. But there is a difference – a big difference – between thinking and talking and actually doing. The danger is that as we think and talk we often feel we are doing. And as we talk more and more about losing weight, or writing our book, or learning that language, or gaining promotion and yet nothing changes we begin to feel disillusioned: why are we not getting what we want? We complain that we have been “working on this for so long”. Not true. But with sufficient attention, we will get the change we want.

For example, have you talked about:

 
  •  making a million
  •  losing some weight
  •  getting out more
  •  writing a book
  •  doing an MBA
  •  watching more foreign films
  •  learning yoga
  •  sorting out your finances
  •  getting up earlier
  •  simply doing anything different to your current routine, and then noticed that nothing happened? 


 


That’s what we want to change. We want to ensure that our intellectual wish becomes our physical reality. Remember: think is not walk. Neither is talk. Give real attention and gain real results: maybe not instantly, maybe not as easily as you would like. But it will happen.

 

So, the three factors are: appropriate dedicated time, appropriate dedicated energy and appropriate dedicated mindset. What do “appropriate” and “dedicated” mean? By appropriate level, we mean sufficient time, or energy or mindset to raise this issue into our everyday consciousness: it’s literally “on our mind”. By dedicated we mean you allow nothing to come in its way. You may have noticed that there are only a few things each day upon which you can truly focus. These are the things which are in your everyday conversation or, more colloquially, in your face. Make this goal one of them.

 
Appropriate Dedicated Time
Factor one in developing, improving and achieving what you want is to shift from occasional mental attention on the skill or topic (i.e., an almost random thought about a change you might like) to maximizing mental (i.e., keep thinking about it until it’s happening) and physical (i.e., keep doing it until it works) attention. This of course requires that you dedicate time. Follow this procedure.

  1. Decide clearly what it is that you want. For the moment we are going to assume that you know. Perhaps you don’t. Or you are a little vague or concerned that your idea seems too simplistic or naive. Whatever, when we look at C for Compass, you’ll know what to do. So we will assume you do for the moment.
  2. Open your diary: paper or electronic. It is going to get a new use. No longer is it just for recording appointments and occasionally listing “stuff to be done”. It’s now a planning tool too, for getting things to happen. Mark when and for how long you are going to dedicate time to this change that you want. Make it a block of time – not just a point of time. For instance, write “10–3, Saturday, water colors” not “10, Sat, water colors”. Blocks of time dedicate the time to a cause. Points of time have a habit of merging with other points of time. 
  3. Whatever happens, stick to that time. If you do have to cancel a time, make a new time. And keep doing this if necessary. You are wiring your body to be accepting of change and that you will get what you want eventually. This latter point is critical. Don’t give up. Be persistent. Be attentive.


Remember that you can always find time for what is important. But you need to make it important to you. If something which is important is not getting done then you will need to change your priorities. Remember that time is easily sucked away. On average, adults in Europe watch 3.5 hours of television per day. Do you really need all of that TV? Don’t whinge when you can’t get the time for your gardening, writing, reading in the large chunks you would wish; simply take what you can. Maybe it is the case that you can’t get half-days for your writing; do it in one-hour chunks instead. Or maybe you can never get enough time to travel to anywhere interesting to develop your photographic skills. So take your camera shopping and practice on something ordinary.

 
Appropriate Dedicated Mindset
Factor two is your mindset. Approach the change or goal with an absolutely determined mindset. Don’t allow anything to come in the way. Be accepting of natural, limiting mindsets such as “this is going to be hard”. Yes, it might, but that needn’t stop you. Be aware that the way you are thinking will have subtle and not-so-subtle effects on the results that you get; the personal psychology of how you approach this goal will probably be the biggest of the three factors. We will do a lot more work on this when we look at B for Beliefs. As an introduction think about how you will react if your plans don’t work out initially. Will you see it as failure? Or as feedback to try a different approach? Will you insist on having half-days for your writing or will you try and work with just 90 minutes? Notice how your mindset affects the way you behave.

 
Appropriate Dedicated Energy
Factor three is your energy. Put some oomph behind your project. Now decide actually to do something in those times which you have scheduled. Go for that walk, work on your MBA, do whatever you have promised yourself that you will do. Energy builds. Once you start you will get improved results. See Compass Point 2 – mind/body (in C for Compass) for more on building energy. I often work with individuals who liaise internationally in global markets. A common goal such individuals would like to realize is language development. Here’s such an example.

 
David’s career was simply not going to progress until he acquired fluency in everyday business Japanese. He had of course known that for years; he spent about 30 percent of his time in Japan on behalf of his UK parent organization. But he had got nowhere. He’d used tape sets, grammar texts. He had received coaching at home and in Japan. There was very little to show for it.
But now he was up against it; his last review had stated in writing that unless he got to a respectable level in Japanese within the year his company would need to replace him with a local specialist. That coincided with an interesting dinner party conversation here David had expressed a worry that he just wasn’t a linguist. “Not necessarily true,” the woman next to him replied, “you simply aren’t giving it enough attention.”
It rang true for David, so he went for it.

  1. Dedicated time: He scheduled 45 minutes every day. Everything else which could go, did go. Whether he felt like it or not, he worked alternate days on grammar and vocabulary. And as he made progress most days, he actually began to enjoy it. Previously he had fitted it in when he could, which was never.
  2. Dedicated mindset: He got really focused on making this work. And he got really focused on what would happen if it didn’t work. Previously he had tackled his language work with increasing resentment.
  3. Dedicated energy: He made sure he worked on it every morning, his best time. Previously it had tended to be the end of the day in hotel rooms. Nine months later David had it cracked. He was regularly congratulated on the standard of his Japanese.


80 percent of success is turning up. 
WOODY ALLEN 
Let’s now take some other specific examples.  
So you want to get fit?

  1. Give it appropriate time. Decide the level of fitness you would like. If in any doubt at all start at the level of walking and taking the stairs. Open your diary (paper or electronic): mark in five 20-minute chunks; do make sure that they are blocks of time. If you can’t do anything this week, then do it the following week. Make it happen.
  2. Give it appropriate mindset. Be aware that other people get fit, even after years of inactivity, so that there is no reason why you can’t do the same. 
  3. Give it appropriate energy. This one could be circular! Start small. Have a good night’s sleep, get up and take that exercise. Notice how much better you sleep the following night.  


So you want to write a book?

  1. Give it appropriate time. Every day write three pages. At this stage don’t worry too much about the quality, simply get used to writing. Once you have become a writer, then you can write a book.
  2. Have an appropriate mindset. Don’t worry about whether it will get published, don’t worry about whether anyone will think it is good. Simply concentrate on a) becoming a writer, and b) writing the book. 
  3. Give it appropriate energy. Choose the best time of day for you and reserve it for your writing.


 So you want to get promoted?
 I suspect you’re getting the hang of this now!

  1. Time: set up four conversations with people who can help.
  2. Mindset: “I’m now ready for the next stage” not “I wonder if…” 
  3. Energy: warm up before conversations.


 


Six Sigma-ஒரு பார்வை

சராசரியிலிருந்து ஆறு திட்டவிலக்கங்களைக் குறிப்பதே Six Sigma ஆகும். s என்பது கிரேக்க மொழியில் புள்ளியியலில் திட்டவிலக்கத்தை குறிப்பிடுவதாகும்.

செயல்படுதிறனை மேம்படுத்துவதற்கும், தவறுகளை பெருமளவு குறைப்பதற்குமான தொழிநுட்பங்களையும், கருவிகளையும் Six Sigma வழிமுறைகளை அளிக்கின்றது. இந்த வழிமுறைகள் எல்லா செயலாக்கங்களுக்கும் (Process) பொருந்தும்.

இது முதன்முதலில் மோட்டோரோலா (Motorola)-வில் பயன்படுத்தப்பட்டது. இதன் உற்பத்தித் துறையில் கோடிக்கணக்கான பொருட்கள் ஒரே மாதிரியான வழிமுறைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. இறுதியில் Six Sigma வளர்ச்சி பெற்று, தற்போது உற்பத்தி சாரா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா துறைகளிலும் உதாரணமாக மருத்துவம், அழைப்பு மையங்கள், மென்பொருள், காப்பீடு போன்ற துறைகளில் Six Sigma அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் தவறுகளை பெருமளவு குறைத்தலே. தவறுகள் மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே இருத்தல் வேண்டும். அதனை அடையும் வழிமுறைகள் Six Sigma விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Six Sigma வழிமுறைகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வழிமுறைகளை தொடர்ச்சியாக மறுமதிப்பீடு செய்வதனாலும், மறு சீர்மை செய்வதனாலும் மேம்படுத்தப்படுகிறது. இதனை அடைவதற்கு Six Sigma DMAIC என்ற வழிமுறையை பயன்படுத்துகிறது.

• Define Opportunities- வாய்ப்புகளை வரையறுத்தல்
• Measure Performance-செயல்திறன் அளவிடல்
• Analyze Opportunity- வாய்ப்புகளை பகுத்தாய்தல்
• Improve Performance- செயல்திறன் உயர்த்துதல்
• Control Performance- செயல்திறன் கட்டுப்படுத்துதல்

Six Sigma வழிமுறைகள் (methodology), அடிப்படை நிலையிலிருந்து ஒரு புதிய வணிக செயலாக்கத்தை (Business Process) உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். Design for Six Sigma (Six Sigma-வுக்கான வடிவமைப்பு ) –ன் கொள்கைகளை பயன்படுத்துவதன் மூலம் மேற்கூறியவற்றை அடைவதோடு தவறுகளை குறைப்பதற்கான வாய்ப்புகளையும் கண்டறியலாம். ஒரு பொருள் உற்பத்தியில் அல்லது சேவை செயல்பாட்டில் 10-இலட்சித்திற்கு வெறும் 3.4 தவறுகளை மட்டுமே Six Sigma அனுமதிக்கிறது.

தவறுகளை குறைப்பதற்கும் தரத்தினை அளவிடுவதற்கும் Six Sigma அதிகன்படியாக புள்ளியியல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது. Six Sigma(Green Belt-பச்சை பட்டை, Black Belt-கருப்பு அட்டை பெற்றவர்கள்) நிபுணர்கள் வணிக நடைமுறைகளை மதிப்பீடு செய்து அதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான வழி மற்றும் வழிமுறைகளை எடுத்துரைப்பார்கள். இவர்கள் DFSS கொள்கைகளை பயன்படுத்தி ஒரு புதிய வணிக நடைமுறையையும், வடிவமைப்பார்கள். வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை மறுசீர்மை செய்வதைவிட DFSS கொள்கைகளை பயன்படுத்தி ஒரு புதிய வணிக நடைமுறையை உருவாக்குவது எளிமையானதாகும். வணிகம், புள்ளியியல் மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகளையும் தொழில்நுட்பங்களையும் Six Sigma ஒருங்கே பயன்படுத்திக் கொள்கிறது. நடைமுறை வெளியீட்டின் செயல்படுதிறனை மேம்படுத்துவதற்கும், மாற்றங்களை குறைப்பதற்கும், சீரான தரத்தை தொடர்ச்சியாக்கவும் வழிகோலுகிறது.

வணிக நடைமுறை மேலாண்மை, உற்பத்தியை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றில்லை. இன்றைய உலகில் Six Sigma-வினை பயன்படுத்தும் வணிக நடைமுறை மேலாண்மை பொதுவாக அழைப்பு மையங்களாகவும், வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களாகவும், திட்ட மேலாண்மை நிறுவனங்களாகவும் இருக்கின்றன.

Six Sigma-ன் முக்கிய கருத்துருக்கள் :
• வாடிக்கையாளர் திருப்தி
• தர வடிவமைப்பு
• மதிப்பீடு மற்றும் அளவிடுதல்
• பணியாளரின் ஈடுபாடு மற்றும்
• தொடர்ச்சியான வளர்ச்சி

Six Sigma என்பது பொதுவாக அறிவு பகிர்தலாகும் (Knowledge Sharing). ஒரு நிறுவனம் ஒன்றிற்கு மேற்பட்ட உற்பத்தி நிலையங்களை கொண்டிருப்பின், ஒரு உற்பத்தி நிலையம் மற்றதைவிட அதிக தரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் Six Sigma குழு இந்த அதிக தரத்திலான பொருட்களை உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டு எந்தவகையில் அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தரமாக பொருட்கள் உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் கண்டறியும். அதற்கேற்ப மற்ற உற்பத்தி நிலையங்களிலும் இதனை நடைமுறைப்படுத்தும்.
எல்லா பணியாளர்களையும் ஈடுபாடு கொள்ளச் செய்வது Six Sigma-ல் மிக முக்கியமானதாகும். நிறுவனம் தன்னிடத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் தங்களின் திறமையினை வளர்த்துக் கொள்வதற்கும் அதன் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்கும் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்பட வேண்டும். GE, Motorola என பல்வேறு பெரிய நிறுவனங்கள் Six Sigma-வை கட்டாயமாக்கியுள்ளன. இதனால் தவறுகள் பெருமளவு குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர் திருப்தி அதிகரிக்கிறது. நிறுவனத்தின் பெயர், தரம், வருவாய் குறிப்பிடும்படியான வளர்ச்சியினை எட்டுகிறது.

ரஜினி முதல் வடிவேலு வரை யாருக்கு எவ்வளவு சம்பளம்?

Requirements in Zenbridge Infotech

Hello ZBees,

We herewith send across the current On-going requirements for which we are looking for good Candidates. I would kindly request you to send the same to your known sources and refer some good profiles to us.
1. Senior Developers - C#/.Net/ASP.Net
   Experience Required : 2-7 years
   Skills Required
   - Strong in ASP.Net, C#, .Net 2.0 and above, Windows Forms, Web Services, CSS,JavaScript
  - Good Knowledge in SQL Server 2005 and above
  - Good Analytical Skills and Logical Skills
  - Ability to work in the absence of any external supervision
  - Good interpersonal Skills and attitude, Should be a team player
  - Good command over English both in written and communication

Preferred Skills

-Experience in Silverlight 2.0 and above, Telerik Controls, WCF, Agile Development


2. SharePoint Developers – WSS/MOSS 2007/MOSS 2010
Skills Required
- Thorough understanding of Microsoft Office SharePoint Server 2007/WSS SDK
- Experience designing and developing web pages, web parts, master pages and layout pages
- Good understanding of SharePoint lists, libraries, workflows, and content/records
- Strong in ASP.Net, C#, .Net 2.0 and above, Web Services, CSS, JavaScript
- Good Analytical Skills and Logical Skills
- Ability to work in the absence of any external supervision
- Good interpersonal Skills and attitude, Should be a team player
- Good command over English both in written and communication

Preferred Skills
-Experience in Silverlight 2.0 and above, Telerik Controls, WCF, Agile Development

3. Trainee Engineer
Experience Required : None (Fresher)
Skills Required
- Any BE / B Tech , ME / M Tech, M.Sc (CS, IT), MCA graduates
- Scored 80% or above in SSLC and HSC and 70% or above in UG/PG
- Good Analytical Skills and Logical Skills
- Good interpersonal Skills and attitude, Should be a team player
- Ability to work in the absence of any external supervision
- Good command over English both in written and communication

Preferred Skills
Basic knowledge in .NET line of technologies and C#

Kindly ask the suitable candidates to send their resumes to or forward the suitable profiles to jobs@zenbridge.com

HR Team
ZenBridge InfoTech
3E, III Floor, Kences Tower (Opp to Vasanth & Co)
1st Ramakrishna Street
North Usman Road
T Nagar
Chennai – 600 017
Ph: 044 42123736